யாழ் புங்குடுதீவில் கட்டடம் அமைப்பதற்காக தோண்டப்பட்ட குழியில் இருந்து மனித எலும்புக்கூடு மீட்கப்பட்ட சம்பவம் அப் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இச் சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
புங்குடுதீவு அரசினர் வைத்தியசாலைக்கு அருகில் உள்ள சதானந்தசிவன் ஆலயத்தின் புனர்நிர்மாணப் பணிகள் இடம்பெற்றுவரும் நிலையில் நேற்றையதினம்(18) அங்கு கட்டடம் அமைப்பதற்காக குழி தோண்டியவேளை குழிக்குள் இருந்து மனித எலும்புக்கூடு கண்டெடுக்கப்பட்டதுடன், இது தொடர்பில் அப்பகுதி கிராமசேவகருக்கு தகவல் வழங்கப்பட்டதோடு, ஊர்காவற்துறை பொலிஸாருக்கும் அறிவிக்கப்பட்டது.
இந்நிலையில் பொலிஸாரும் இச் சம்பவம் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
கடந்த 1985 ஆம் ஆண்டு, நெடுந்தீவு குமுதினி படகில் கடற்படையினரால் வெட்டிக்கொல்லப்பட்ட இருவரது சடலங்கள் இப்பகுதியிலேயே அடக்கம் செய்யப்பட்டதாகவும் அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் தெரிவித்துள்ளனர்.
எனினும் உரிய பகுப்பாய்வுகளுக்கு பின்னரே அதன் உண்மைத் தன்மை பற்றி உறுதியாக கூற முடியும் என சம்பந்தப்பட்ட தரப்புக்களில் இருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
யாழ் புங்குடுதீவில் மீட்கப்பட்ட மனித எலும்புக்கூட்டால் பரபரப்பு. யாழ் புங்குடுதீவில் கட்டடம் அமைப்பதற்காக தோண்டப்பட்ட குழியில் இருந்து மனித எலும்புக்கூடு மீட்கப்பட்ட சம்பவம் அப் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.இச் சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,புங்குடுதீவு அரசினர் வைத்தியசாலைக்கு அருகில் உள்ள சதானந்தசிவன் ஆலயத்தின் புனர்நிர்மாணப் பணிகள் இடம்பெற்றுவரும் நிலையில் நேற்றையதினம்(18) அங்கு கட்டடம் அமைப்பதற்காக குழி தோண்டியவேளை குழிக்குள் இருந்து மனித எலும்புக்கூடு கண்டெடுக்கப்பட்டதுடன், இது தொடர்பில் அப்பகுதி கிராமசேவகருக்கு தகவல் வழங்கப்பட்டதோடு, ஊர்காவற்துறை பொலிஸாருக்கும் அறிவிக்கப்பட்டது.இந்நிலையில் பொலிஸாரும் இச் சம்பவம் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.கடந்த 1985 ஆம் ஆண்டு, நெடுந்தீவு குமுதினி படகில் கடற்படையினரால் வெட்டிக்கொல்லப்பட்ட இருவரது சடலங்கள் இப்பகுதியிலேயே அடக்கம் செய்யப்பட்டதாகவும் அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் தெரிவித்துள்ளனர்.எனினும் உரிய பகுப்பாய்வுகளுக்கு பின்னரே அதன் உண்மைத் தன்மை பற்றி உறுதியாக கூற முடியும் என சம்பந்தப்பட்ட தரப்புக்களில் இருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.