• May 03 2024

திருமணமான பெண்ணுடன் காதல்..! அன்புலன்ஸ் சாரதிக்கு நேர்ந்த கதி..! samugammedia

Chithra / May 21st 2023, 11:03 am
image

Advertisement

ஹம்பாந்தோட்டை - கட்டுவெவ பிரதேசத்தில் நோயாளர் காவு வண்டி சாரதி ஒருவர் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டதில் பலத்த காயமடைந்துள்ளார்.

ஹம்பாந்தோட்டை பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட அவர் பின்னர் கராப்பிட்டிய போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.

நேற்று (20) பிற்பகல் குறித்த நபர் கட்டுவெவ பகுதியில் உள்ள தனது வீட்டில், பெண் ஒருவருடன் இருந்த போது குறித்த பெண்ணின்  கணவர் அவ்விடத்திற்கு வந்து கூரிய ஆயுதத்தால் குறித்த சாரதியை தாக்கியதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.


தாக்குதலுக்கு உள்ளான சாரதி ஹம்பாந்தோட்டை பொது வைத்தியசாலையில் பணிபுரிவதாகவும், குறித்த பெண் அதே வைத்தியசாலையில் தூய்மை பணியாளராக கடமையாற்றுவதாகவும் காவல்துறையினர் தெரிவித்தனர்.

காயமடைந்த சாரதி திஸ்ஸமஹாராம - கங்காசிறிபுர பிரதேசத்தை சேர்ந்தவர் என தெரியவந்துள்ளது.

சாரதியை தாக்கிய நபர் ஹம்பாந்தோட்டை தலைமையக காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளதுடன், அவர் இன்று ஹம்பாந்தோட்டை நீதவான் முன்னிலையில் முற்படுத்தப்படவுள்ளார்.


திருமணமான பெண்ணுடன் காதல். அன்புலன்ஸ் சாரதிக்கு நேர்ந்த கதி. samugammedia ஹம்பாந்தோட்டை - கட்டுவெவ பிரதேசத்தில் நோயாளர் காவு வண்டி சாரதி ஒருவர் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டதில் பலத்த காயமடைந்துள்ளார்.ஹம்பாந்தோட்டை பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட அவர் பின்னர் கராப்பிட்டிய போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.நேற்று (20) பிற்பகல் குறித்த நபர் கட்டுவெவ பகுதியில் உள்ள தனது வீட்டில், பெண் ஒருவருடன் இருந்த போது குறித்த பெண்ணின்  கணவர் அவ்விடத்திற்கு வந்து கூரிய ஆயுதத்தால் குறித்த சாரதியை தாக்கியதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.தாக்குதலுக்கு உள்ளான சாரதி ஹம்பாந்தோட்டை பொது வைத்தியசாலையில் பணிபுரிவதாகவும், குறித்த பெண் அதே வைத்தியசாலையில் தூய்மை பணியாளராக கடமையாற்றுவதாகவும் காவல்துறையினர் தெரிவித்தனர்.காயமடைந்த சாரதி திஸ்ஸமஹாராம - கங்காசிறிபுர பிரதேசத்தை சேர்ந்தவர் என தெரியவந்துள்ளது.சாரதியை தாக்கிய நபர் ஹம்பாந்தோட்டை தலைமையக காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளதுடன், அவர் இன்று ஹம்பாந்தோட்டை நீதவான் முன்னிலையில் முற்படுத்தப்படவுள்ளார்.

Advertisement

Advertisement

Advertisement