யாழ்ப்பாணம் - காரைநகர் கடற்கரைப் பகுதியில் பெருந்தொகை கஞ்சா மீட்கப்பட்டுள்ளது.
இரகசிய தகவலின் அடிப்படையில் இன்று காலை, குறித்த கடற்பரப்பிலிருந்து 60 கிலோ கஞ்சாவை காரைநகர் பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.
கஞ்சாவை கைப்பற்றியபோதும் கஞ்சாவை கடத்தியவர்களை பொலிஸார் கைது செய்யவில்லை என தெரியவருகின்றது.
தொடர்ச்சியாக கஞ்சா மீட்கப்பட்டு வரும் நிலையிலும், கடத்தல்காரர்கள் எவரும் கைதுசெய்யப்படாதது ஏன் என மக்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.