நாட்டில் ஏற்பட்ட யுத்த அனர்த்தத்தின் பின்னர் 1981 ம் ஆண்டுக்குப் பின்னர் இலங்கை வங்கியின் காங்கேசன்துறை காரியாலயம் நவீனதொழில்நுட்ப வசதிகளுடன் இன்றைய தினம்(09) திறந்துவைக்கப்பட்டது.
குறித்த வங்கி கிளை திறப்பு நிகழ்வில் இலங்கை வங்கியின் வட பிராந்திய முகாமையாளர், யாழ் மாவட்ட இராணுவ கட்டளை தளபதி, தெல்லிப்பளை பிரதேசசெயலர், வலி. வடக்கு பிரதேச சபை தவிசாளர், பொலிஸ் உயர் அதிகாரிகள் மற்றும் இலங்கை வங்கியின் வங்கி முகாமையாளர்கள் கலந்துகொண்டனர்.