அரசாங்கம் எதிர்பார்க்கின்ற மின்கட்டணத்தை அதிகரிக்க அனுமதி வழங்கப்பட்டால் நடைமுறையில் இருக்கும் மின் வெட்டினை நிறுத்த முடியுமென இலங்கை மின்சார சபையின் பொது முகாமையாளர் பொறியியலாளர் ரொஹான் செனவிரத்ன தெரிவித்துள்ளார்.
அத்துடன் இந்த கொள்கைக்கு அமைவாகவே அடுத்த வருடத்திற்கான மின் உற்பத்தி திட்டம் தயாரிக்கப்பட்டுள்ளதாகவும், அதன் அடிப்படையில் செலவீனம் மற்றும் நிர்ணயிப்புகள், அளவிடப்பட்டுள்ளதாகவும் ரொஹான் செனவிரத்ன குறிப்பிட்டுள்ளார்.
மேலும் கட்டணம் அதிகரிக்கப்பட்டால் மின்வெட்டு இன்றி மின்சாரத்தை தொடர்ந்து வழங்க முடியும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
இதேவேளை மின்சாரக் கட்டணத்தை அதிகரிப்பது தொடர்பான அமைச்சரவை பத்திரம் இன்றைய தினம் மீண்டும் சமர்ப்பிக்கப்பட உள்ளதாக மின்வலு மற்றும் எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்திருந்தார்.
அத்துடன் இதற்கு முன்னர் இரண்டு தடவைகள் மின்சாரக் கட்டண அதிகரிப்பு குறித்த அமைச்சரவை பத்திரத்தை சமர்ப்பிக்கப்பட்டிருந்தமையும் குறிப்பிடத்ததக்கது.
மின்கட்டணம் அதிகரிப்பு – மின்வெட்டை நிறுத்த தீர்மானம் - வெளியான அதிரடி அறிவிப்பு அரசாங்கம் எதிர்பார்க்கின்ற மின்கட்டணத்தை அதிகரிக்க அனுமதி வழங்கப்பட்டால் நடைமுறையில் இருக்கும் மின் வெட்டினை நிறுத்த முடியுமென இலங்கை மின்சார சபையின் பொது முகாமையாளர் பொறியியலாளர் ரொஹான் செனவிரத்ன தெரிவித்துள்ளார்.அத்துடன் இந்த கொள்கைக்கு அமைவாகவே அடுத்த வருடத்திற்கான மின் உற்பத்தி திட்டம் தயாரிக்கப்பட்டுள்ளதாகவும், அதன் அடிப்படையில் செலவீனம் மற்றும் நிர்ணயிப்புகள், அளவிடப்பட்டுள்ளதாகவும் ரொஹான் செனவிரத்ன குறிப்பிட்டுள்ளார்.மேலும் கட்டணம் அதிகரிக்கப்பட்டால் மின்வெட்டு இன்றி மின்சாரத்தை தொடர்ந்து வழங்க முடியும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.இதேவேளை மின்சாரக் கட்டணத்தை அதிகரிப்பது தொடர்பான அமைச்சரவை பத்திரம் இன்றைய தினம் மீண்டும் சமர்ப்பிக்கப்பட உள்ளதாக மின்வலு மற்றும் எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்திருந்தார்.அத்துடன் இதற்கு முன்னர் இரண்டு தடவைகள் மின்சாரக் கட்டண அதிகரிப்பு குறித்த அமைச்சரவை பத்திரத்தை சமர்ப்பிக்கப்பட்டிருந்தமையும் குறிப்பிடத்ததக்கது.