• Apr 28 2024

உடைகிறது சுதந்திரக் கட்சி...! வெளியேறத் தயார்...! தயாசிறி அதிரடி...!samugammedia

Sharmi / Sep 1st 2023, 10:32 am
image

Advertisement

பாராளுமன்ற உறுப்பினர்  தயாசிறி ஜயசேகர ஐக்கிய தேசியக் கட்சியில் இணையவுள்ளதாகவும், சுதந்திரக் கட்சியில் அவருக்கெதிராக நடவடிக்கைகள் எடுக்கப்படவுள்ளது என தகவல்கள் வெளியாகிய நிலையில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியில் இருந்து தன்னை நீக்குவதற்கு ஒரு குழுவினர் முயற்சித்து வருவதாக தயாசிறி ஜயசேகர குற்றம் சுமத்தியுள்ளார்.

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைமையகத்தில் இடம்பெற்ற கலந்துரையாடலின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே தயாசிறி ஜயசேகர இவ்வாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன என்னை கட்சியில் வைத்திருக்க விரும்பவில்லை என்றால், நிறைவேற்று சபை என்னை விரும்பவில்லை என்றால், நான் வெளியேற தயார், என்னை நீக்க மேல்மட்டத்தில் உள்ளவர்களே முயற்சி. அதற்கு நான் பயப்படவில்லை. என்னால் பெயர்களை குறிப்பிட முடியாது. அவர்கள் இதை ஐக்கிய தேசியக் கட்சியுடன் இணைக்க விரும்புகிறார்கள் எனவும் தெரிவித்தார்.

உடைகிறது சுதந்திரக் கட்சி. வெளியேறத் தயார். தயாசிறி அதிரடி.samugammedia பாராளுமன்ற உறுப்பினர்  தயாசிறி ஜயசேகர ஐக்கிய தேசியக் கட்சியில் இணையவுள்ளதாகவும், சுதந்திரக் கட்சியில் அவருக்கெதிராக நடவடிக்கைகள் எடுக்கப்படவுள்ளது என தகவல்கள் வெளியாகிய நிலையில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியில் இருந்து தன்னை நீக்குவதற்கு ஒரு குழுவினர் முயற்சித்து வருவதாக தயாசிறி ஜயசேகர குற்றம் சுமத்தியுள்ளார்.ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைமையகத்தில் இடம்பெற்ற கலந்துரையாடலின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே தயாசிறி ஜயசேகர இவ்வாறு தெரிவித்தார்.அவர் மேலும் தெரிவிக்கையில்,முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன என்னை கட்சியில் வைத்திருக்க விரும்பவில்லை என்றால், நிறைவேற்று சபை என்னை விரும்பவில்லை என்றால், நான் வெளியேற தயார், என்னை நீக்க மேல்மட்டத்தில் உள்ளவர்களே முயற்சி. அதற்கு நான் பயப்படவில்லை. என்னால் பெயர்களை குறிப்பிட முடியாது. அவர்கள் இதை ஐக்கிய தேசியக் கட்சியுடன் இணைக்க விரும்புகிறார்கள் எனவும் தெரிவித்தார்.

Advertisement

Advertisement

Advertisement