• Sep 23 2024

யாழில் இளையோரை போதைக்கு அடிமையாக்கி வந்த கும்பல் தொடர்பில் வெளியான தகவல்..! samugammedia

Chithra / Sep 8th 2023, 4:05 pm
image

Advertisement

யாழில்  இளையோரை போதைக்கு அடிமையாக்கி, அவர்களுக்கு போதைப்பொருளை விற்பனை செய்து  வந்த நால்வர் அடங்கிய கும்பலொன்றைப்  பொலிஸார் நேற்றைய தினம் கைது செய்துள்ளனர்.

பொலிஸாருக்குக் கிடைத்த ரகசியத்  தகவலையடுத்தே இக்கைது நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இந்நிலையில் கைது  செய்யப்பட்டவர்களில் யாழில் உள்ள பிரபல தனியார் வைத்தியசாலையில் பணி புரியும் பெண்ணொருவரும் அடங்குவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் குறித்த நால்வரும்  யாழில் இயங்கும் பாரிய போதைக்கும்பலின் வலையமைப்பை சேர்ந்தவர்கள் என்றும், குறித்த வலையமைப்பைக்  கைது செய்வதற்கு உரிய நடவடிக்கைகள்  முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.



யாழில் இளையோரை போதைக்கு அடிமையாக்கி வந்த கும்பல் தொடர்பில் வெளியான தகவல். samugammedia யாழில்  இளையோரை போதைக்கு அடிமையாக்கி, அவர்களுக்கு போதைப்பொருளை விற்பனை செய்து  வந்த நால்வர் அடங்கிய கும்பலொன்றைப்  பொலிஸார் நேற்றைய தினம் கைது செய்துள்ளனர்.பொலிஸாருக்குக் கிடைத்த ரகசியத்  தகவலையடுத்தே இக்கைது நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் கைது  செய்யப்பட்டவர்களில் யாழில் உள்ள பிரபல தனியார் வைத்தியசாலையில் பணி புரியும் பெண்ணொருவரும் அடங்குவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.அத்துடன் குறித்த நால்வரும்  யாழில் இயங்கும் பாரிய போதைக்கும்பலின் வலையமைப்பை சேர்ந்தவர்கள் என்றும், குறித்த வலையமைப்பைக்  கைது செய்வதற்கு உரிய நடவடிக்கைகள்  முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

Advertisement

Advertisement

Advertisement