• May 17 2024

காதலுக்காக இப்படியா...திருமண சான்றிதழை கையில் டாட்டூவாக குத்திய கணவன்!SamugamMedia

Sharmi / Feb 16th 2023, 10:25 pm
image

Advertisement

உலகெங்கிலுமுள்ள காதலர்களால் பெப்ரவரி14 ஆம் திகதி காதலர் தினம் கொண்டாடப்பட்டு வருகின்றது.

அந்தவகையில் காதலர் தினத்தில் காதலர்கள் தங்கள் இணையை ஆச்சரியப்படுத்துவதற்காக பல்வேறு காரியங்களை செய்கிறார்கள் என்பதும் ஒரு சில மிகவும் ஆச்சரியமாக இருக்கும் என்றும் ஒரு சிலவற்றை கேட்பதற்கே நகைச்சுவையாக இருக்கும் என்பதையும் பார்த்து வருகிறோம்.


அந்த வகையில் தாய்லாந்து நாட்டை சேர்ந்த கணவர் தனது மனைவியை அசத்துவதற்காக திருமண சான்றிதழையே தனது கையில் டாட்டுவாக குத்தியிருப்பது பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது.

தாய்லாந்து சேர்ந்த ஒருவர் காதலர் தினத்தில் தனது மனைவியை அசத்த வேண்டும் என்பதற்காக பல்வேறு விதமாக யோசனை செய்தார்.

அதன் பிறகு அவர் தனது திருமண சான்றிதழை கையில் பச்சை குத்திக் கொள்ள முடிவு செய்தார்.


இதனை அடுத்து அவர் ஒரு மிகச்சிறந்த டாட்டூ கலைஞரை சந்தித்து இது குறித்து கூறினார்.

முதலில் யோசித்த அந்த டாட்டூ கலைஞர் அதன்பின் ஒப்புக்கொண்டார். சுமார் எட்டு மணி நேரம் செலவு செய்து அவரது கையில் இரண்டு பக்கத்திலும் திருமண சான்றிதழ் டாட்டூ குத்தப்பட்டது.


அந்த திருமண சான்றிதழில் உள்ள ஒரு தகவல்களை விடாமல் அச்சு அசலாக திருமண சான்றிதழை பச்சை குத்தி கொண்டார்.

இது குறித்து அந்த டாட்டூ கலைஞர் கூறிய போது,

’இதுவரை ஒருவர் உடலில் திருமண சான்றுகளை நான் டாட்டூ வரைந்ததில்லை என்றும் இதுதான் முதல் முறை என்றும் இது நீண்ட நேரம் ஆனது என்றும், சற்று கடினமாகவும் இருந்தது என்றும் கூறினார்.


இருப்பினும் அந்த நபரின் அன்புக்கு நான் அடிமை ஆனேன் என்றும் அவர் தனது மனைவியை அசத்த வேண்டும் என்று கெஞ்சி கேட்டுக் கொண்டதால் அதற்கு ஒப்புக்கொண்டேன் என்றும் அவர் தெரிவித்து இருந்தார். முழு சான்றிதழையும் சாதாரண மையால் முதலில் நகலெடுத்து அதன் பின் டாட்டூ துப்பாக்கி மூலம் வரைந்தேன் என்றும் மிக கச்சிதமாக இந்த டாட்டூ வந்திருக்கிறது என்றும் அவர் தெரிவித்தார்.


இந்த நிலையில் தனது கையில் திருமண சான்றிதழ் டாட்டூ குத்தி கொண்டு சென்ற அந்த நபர் தான் அது மனைவியிடம் அதை காண்பித்தபோது ஒரு நிமிடம் அவரை மனைவி ஆச்சரியத்தால் கண்ணிமைக்காமல் பார்த்துக் கொண்டிருந்தார்.

அதன் பிறகு தன் மேல் வைத்திருந்த அன்பின் வெளிப்படை தான் இந்த டாட்டூ என்பதை புரிந்து கொண்டு அவரை கட்டி அணைத்துக் கொண்டு நன்றி தெரிவித்துள்ளார். இது குறித்த புகைப்படங்கள் இணையதளங்களில் வைரல் ஆகி வருகிறது.



காதலுக்காக இப்படியா.திருமண சான்றிதழை கையில் டாட்டூவாக குத்திய கணவன்SamugamMedia உலகெங்கிலுமுள்ள காதலர்களால் பெப்ரவரி14 ஆம் திகதி காதலர் தினம் கொண்டாடப்பட்டு வருகின்றது.அந்தவகையில் காதலர் தினத்தில் காதலர்கள் தங்கள் இணையை ஆச்சரியப்படுத்துவதற்காக பல்வேறு காரியங்களை செய்கிறார்கள் என்பதும் ஒரு சில மிகவும் ஆச்சரியமாக இருக்கும் என்றும் ஒரு சிலவற்றை கேட்பதற்கே நகைச்சுவையாக இருக்கும் என்பதையும் பார்த்து வருகிறோம்.அந்த வகையில் தாய்லாந்து நாட்டை சேர்ந்த கணவர் தனது மனைவியை அசத்துவதற்காக திருமண சான்றிதழையே தனது கையில் டாட்டுவாக குத்தியிருப்பது பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது.தாய்லாந்து சேர்ந்த ஒருவர் காதலர் தினத்தில் தனது மனைவியை அசத்த வேண்டும் என்பதற்காக பல்வேறு விதமாக யோசனை செய்தார். அதன் பிறகு அவர் தனது திருமண சான்றிதழை கையில் பச்சை குத்திக் கொள்ள முடிவு செய்தார். இதனை அடுத்து அவர் ஒரு மிகச்சிறந்த டாட்டூ கலைஞரை சந்தித்து இது குறித்து கூறினார். முதலில் யோசித்த அந்த டாட்டூ கலைஞர் அதன்பின் ஒப்புக்கொண்டார். சுமார் எட்டு மணி நேரம் செலவு செய்து அவரது கையில் இரண்டு பக்கத்திலும் திருமண சான்றிதழ் டாட்டூ குத்தப்பட்டது. அந்த திருமண சான்றிதழில் உள்ள ஒரு தகவல்களை விடாமல் அச்சு அசலாக திருமண சான்றிதழை பச்சை குத்தி கொண்டார்.இது குறித்து அந்த டாட்டூ கலைஞர் கூறிய போது, ’இதுவரை ஒருவர் உடலில் திருமண சான்றுகளை நான் டாட்டூ வரைந்ததில்லை என்றும் இதுதான் முதல் முறை என்றும் இது நீண்ட நேரம் ஆனது என்றும், சற்று கடினமாகவும் இருந்தது என்றும் கூறினார்.இருப்பினும் அந்த நபரின் அன்புக்கு நான் அடிமை ஆனேன் என்றும் அவர் தனது மனைவியை அசத்த வேண்டும் என்று கெஞ்சி கேட்டுக் கொண்டதால் அதற்கு ஒப்புக்கொண்டேன் என்றும் அவர் தெரிவித்து இருந்தார். முழு சான்றிதழையும் சாதாரண மையால் முதலில் நகலெடுத்து அதன் பின் டாட்டூ துப்பாக்கி மூலம் வரைந்தேன் என்றும் மிக கச்சிதமாக இந்த டாட்டூ வந்திருக்கிறது என்றும் அவர் தெரிவித்தார்.இந்த நிலையில் தனது கையில் திருமண சான்றிதழ் டாட்டூ குத்தி கொண்டு சென்ற அந்த நபர் தான் அது மனைவியிடம் அதை காண்பித்தபோது ஒரு நிமிடம் அவரை மனைவி ஆச்சரியத்தால் கண்ணிமைக்காமல் பார்த்துக் கொண்டிருந்தார். அதன் பிறகு தன் மேல் வைத்திருந்த அன்பின் வெளிப்படை தான் இந்த டாட்டூ என்பதை புரிந்து கொண்டு அவரை கட்டி அணைத்துக் கொண்டு நன்றி தெரிவித்துள்ளார். இது குறித்த புகைப்படங்கள் இணையதளங்களில் வைரல் ஆகி வருகிறது.

Advertisement

Advertisement

Advertisement