இஸ்ரேலிய இராணுவத்தினரால் பலஸ்தீனியர்கள் இருவர் இன்று சுட்டுக்கொல்லப்பட்டதாக பலஸ்தீன சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
பலஸ்தீனத்தின் ஜெனின் நகரில் இன்று அதிகாலை இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. 62 வயதான ஜவாத் பரீட் பவாக்னா, 28 வயதான அதாம் மொஹம்மத் பசேம் ஜெபறீன் ஆகியோ இஸ்ரேலிய படையினரால் கொல்லப்பட்டனர் என பலஸ்தீன சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
இதேவேளை, ஜெனின் நகர அகதிகள் முகாமில் பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கைகளின்போது, இஸ்ரேலிய படையினர் மீது பலஸ்தீன ஆயுதபாணிகள் தாக்குதல் நடத்தியதாகவும், இஸ்ரேலியப் படையினர் பதில் தாக்குதல் நடத்தியதாகவும் இஸ்ரேலிய இராணுவம் தெரிவித்துள்ளது.
மேற்குக் கரையில் இம்மாதம் கொல்லப்பட்ட பலஸ்தீனர்களின் எண்ணிக்கை 17 ஆக அதிகரித்துள்ளது. மேலும் இவர்களில் பெரும்பாலானோர் இஸ்ரேலிய படையினரால் கொல்லப்பட்டனர்.
இரு பலஸ்தீனியர்களை சுட்டுக்கொன்ற இஸ்ரேலிய இராணுவம் இஸ்ரேலிய இராணுவத்தினரால் பலஸ்தீனியர்கள் இருவர் இன்று சுட்டுக்கொல்லப்பட்டதாக பலஸ்தீன சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.பலஸ்தீனத்தின் ஜெனின் நகரில் இன்று அதிகாலை இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. 62 வயதான ஜவாத் பரீட் பவாக்னா, 28 வயதான அதாம் மொஹம்மத் பசேம் ஜெபறீன் ஆகியோ இஸ்ரேலிய படையினரால் கொல்லப்பட்டனர் என பலஸ்தீன சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.இதேவேளை, ஜெனின் நகர அகதிகள் முகாமில் பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கைகளின்போது, இஸ்ரேலிய படையினர் மீது பலஸ்தீன ஆயுதபாணிகள் தாக்குதல் நடத்தியதாகவும், இஸ்ரேலியப் படையினர் பதில் தாக்குதல் நடத்தியதாகவும் இஸ்ரேலிய இராணுவம் தெரிவித்துள்ளது.மேற்குக் கரையில் இம்மாதம் கொல்லப்பட்ட பலஸ்தீனர்களின் எண்ணிக்கை 17 ஆக அதிகரித்துள்ளது. மேலும் இவர்களில் பெரும்பாலானோர் இஸ்ரேலிய படையினரால் கொல்லப்பட்டனர்.