நூறு ரூபாய் கூட உழைக்க முடியாத நிலையில் யாழ் தீவக மீனவர்கள் ,இன்னல்களை எதிர் நோக்குகின்றனர் என புங்குடுதீவு நசரத் கடறதொழிலாளர் கூட்டுறவு சங்க தலைவர் க.ரவி தெரிவித்துள்ளார்.
யாழ் ஊடக அமையத்தில் இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
எமது கடல் பரப்பில் சிறு தொழிலாக பலர் இறால் கூடு தொழில் செய்கின்றனர்.சுமார் 40 வருடங்களாக மக்கள் இந்த தொழிலை செய்து வருகின்றனர்.இந்த கடல் பரப்பில் தொழில் செய்தால் 1000 ரூபா கிடைக்கும்.இப்போது கடல் அட்டை பண்ணைகள் அங்கு வந்திருப்பதால்,எமது தொழிலாளர்களுக்கு இறால் குறைந்து உழைப்பு குறைந்துள்ளது.100 ரூபாய் கூட உழைக்க முடியாத நிலையில் சிறு தொழிலாளர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
தயவு செய்து எங்கள் கடல் பரப்பில் உள்ள கடல் அட்டை பண்ணைகளை அகற்றுங்கள்.அரசியல் வாதிகள்,தங்கள் தேவைக்கு மட்டும் இங்கே வராமல்,மக்கள் பிரச்சினையும் தீர்த்து வைக்க வேண்டும்.போராடும் மக்களின் பிரச்சினைகளை மக்கள் பிரதிநிதிகள் நேரில் சென்று கேட்டு அறிய வேண்டும் என்றார்.