• May 22 2024

யாழ் மாவட்ட புதிய அரச அதிபர் இன்று பொறுப்பேற்பு

Chithra / Jan 18th 2023, 7:17 am
image

Advertisement

யாழ்ப்பாண மாவட்ட புதிய அரச அதிபராக அம்பலவாணர் சிவபாலசுந்தரன் (17)  பிரதமர் அலுவலகத்தில் வைத்து தமக்கான நியமன கடிதத்தினை  பெற்றுக் கொண்டுள்ளார்.

இதனைத்தொடர்ந்து இன்று(18) யாழ்ப்பாண மாவட்ட செயலகத்தில் தனது கடமைகளை உத்தியோகபூர்வமாக பொறுப்பேற்றுகவுள்ளார் என தெரியவருகிறது.

யாழ்ப்பாண மாவட்ட அரச அதிபராக அம்பலவாணர் சிவபாலசுந்தரன் நியமனம் செய்வதற்கான அனுமதியை (16) அமைச்சரவை  வழங்கியுள்ளது

இலங்கை நிருவாக சேவையின் (விசேட தர) மூத்த அதிகாரியான இவர், மட்டக்களப்பு, கொழும்பு, வவுனியா போன்ற இடங்களில் பல்வேறு பதவிகளில் கடமையாற்றி, 2013 ஆம் ஆண்டு தொடக்கம் வடக்கு மாகாணசபையின் பேரவைச் செயலக செயலாளராக, பிரதிப் பிரதம செயலாளராக, மாகாணப் பொதுச்சேவை ஆணைக்குழு செயலாளராக கடமையாற்றி நிறைவாக மாகாண விவசாய அமைச்சின் செயலாளராக கடமையாற்றியிருந்தார்.


யாழ் மாவட்ட புதிய அரச அதிபர் இன்று பொறுப்பேற்பு யாழ்ப்பாண மாவட்ட புதிய அரச அதிபராக அம்பலவாணர் சிவபாலசுந்தரன் (17)  பிரதமர் அலுவலகத்தில் வைத்து தமக்கான நியமன கடிதத்தினை  பெற்றுக் கொண்டுள்ளார்.இதனைத்தொடர்ந்து இன்று(18) யாழ்ப்பாண மாவட்ட செயலகத்தில் தனது கடமைகளை உத்தியோகபூர்வமாக பொறுப்பேற்றுகவுள்ளார் என தெரியவருகிறது.யாழ்ப்பாண மாவட்ட அரச அதிபராக அம்பலவாணர் சிவபாலசுந்தரன் நியமனம் செய்வதற்கான அனுமதியை (16) அமைச்சரவை  வழங்கியுள்ளதுஇலங்கை நிருவாக சேவையின் (விசேட தர) மூத்த அதிகாரியான இவர், மட்டக்களப்பு, கொழும்பு, வவுனியா போன்ற இடங்களில் பல்வேறு பதவிகளில் கடமையாற்றி, 2013 ஆம் ஆண்டு தொடக்கம் வடக்கு மாகாணசபையின் பேரவைச் செயலக செயலாளராக, பிரதிப் பிரதம செயலாளராக, மாகாணப் பொதுச்சேவை ஆணைக்குழு செயலாளராக கடமையாற்றி நிறைவாக மாகாண விவசாய அமைச்சின் செயலாளராக கடமையாற்றியிருந்தார்.

Advertisement

Advertisement

Advertisement