பொதுமக்களின் எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்களை
கையாளுதல் தொடர்பில் அரசாங்கத்திற்கு மற்றும் சட்டத்தை அமுலாக்கும்
அதிகாரிகளுக்கு சிபாரிசு செய்யப்படும் பரிந்துரைகள் தொடர்பான கலந்துரையாடல்
இன்றையதினம் யாழ். பிரதேச செயலக பொதுநோக்கு மண்டபத்தில் இடம்பெற்றது.
இலங்கை
மனித உரிமைகள் ஆணைக்குழுவின் (HRCSL) யாழ்ப்பாண பிராந்திய அலுவலகம், அரச
மற்றும் சட்ட அமலாக்க அதிகாரிகளுக்கு சிவில் போராட்டங்களைக் கையாள்வதற்கான
பரிந்துரைக்கப்பட்ட வழிகாட்டுதல்கள் பற்றிய கலந்துரையாடல்கள் இதன்போது
இடம்பெற்றன.
இலங்கை மனித
உரிமைகள் ஆணைக்குழுவின் யாழ். பிராந்திய இணைப்பாளர் த.கனகராஜ்
தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், மனித உரிமைகள் தொடர்பான அரச சார்பற்ற
நிறுவன பிரதிநிதிகள், மனித உரிமைகள் தொடர்பான செயற்பாட்டாளர்கள், இலங்கை
ஆசிரியர் சங்கத்தினர், சமூக செயற்பாட்டாளர்கள், ஊடகவியலாளர்கள் மற்றும்
இளைஞர் யுவதிகள் என பலர் இதில் கலந்துகொண்டனர்.
![](https://samugammedia.com/public/samugam_uploads/16853538320.png)
![](https://samugammedia.com/public/samugam_uploads/16853538321.png)
![](https://samugammedia.com/public/samugam_uploads/16853538322.png)
![](https://samugammedia.com/public/samugam_uploads/16853538323.png)
![](https://samugammedia.com/public/samugam_uploads/16853538324.png)
![](https://samugammedia.com/public/samugam_uploads/16853538325.png)