சுகததாஸ விளையாட்டரங்கில் பாடசாலைகளுக்கிடையில் தேசிய ரீதியிலான மெய்வல்லுனர் போட்டிகள் நடைபெற்று வருகிறது.
அந்தவகையில் 18 வயதுப்பிரிவு ஆண்கள் கோலூன்றி பாய்தல் போட்டியில் தெல்லிப்பழை மகாஜனக் கல்லூரியை சேர்ந்த செல்வன் ச.துசாந்தன் 4.10M தாண்டி 2ஆம் இடத்தைப்பெற்று வெள்ளிப் பதக்கத்தினை பெற்றுக் கொண்டார்.
அத்துடன் செல்வன் ந.டனுசன் 3.70M தாண்டி வர்ணச் சான்றிதழையும் பெற்றுக்கொண்டார்.