வலிகாமம் மேற்கு பிரதேச சபையின் ஆளுகைக்குட்பட்ட சுழிபுரம் மத்தி கம்பனை கிளையொழுங்கையின் புனரைமைப்பு பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
வலிகாமம் மேற்கு பிரதேச சபையின் முன்னாள் பிரதேச சபையின் உறுப்பினர் பொறியிலாளர் விசாகபொருமாள் உமாபதியின் முன்மொழிவின் அடிப்படையில் ஒரு மில்லியன் ரூபாய் செலவில் குறித்த வீதி புனரமைப்பு பணிகள் இடம்பெறுகின்றது.
இந்நிலையில் குறித்த வீதியினை நேரடியாக களவிஜயம் செய்து குறித்த வீதியின் எஞ்சிய பகுதியும் புனரைமைப்பு செய்ய பொதுமக்களுடன் கலந்துரையாடப்பட்டது.
இதன்பொழுது இலங்கை தமிழரசு கட்சியின் வட்டுக்கோட்டை தொகுதி சுழிபுரம் மூலக்கிளையின் தலைவர் சிவசண்முகநாதனும் இணைந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.