• Apr 27 2024

அஸ்கிரிய பீடாதிபதியிடம் ஆசி பெற்ற ஜீவன்: நல்லிணக்க செயற்பாடுகளை முன்னெடுப்பதாக உறுதி! samugammedia

Chithra / May 21st 2023, 4:12 pm
image

Advertisement

கண்டி அஸ்கிரிய பீடத்தின் மகாநாயக்க தேரர் அதி வண.வரக்காகொட ஸ்ரீ ஞானரத்ன தேரரை நீர் வழங்கல் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு வசதிகள் அபிவிருத்தி அமைச்சர் ஜீவன் தொண்டமான் சந்தித்து ஆசிகளை பெற்றுள்ளார்.

நேற்றைய தினம் (20.05.2023) இடம்பெற்றுள்ள இச்சந்திப்பில், மகாநாயக்கர்களின் ஆசியுடன் இந்து மற்றும் பௌத்த மத நல்லிணக்கத்திற்கான பல்வேறு செயற்பாடுகளை முன்னெடுக்க உள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

அத்தோடு மறைந்த பெருந் தலைவர்களான சௌமியமூர்த்தி தொண்டமான், ஆறுமுகன் தொண்டமான் ஆகியோரின் காலம் தொட்டு கண்டி அஸ்கிரிய பீடத்துடன் நல்லதொரு தொடர்பை பேணி வருவதையும் அமைச்சர் நினைவுகூர்ந்துள்ளார்.

மேலும், இந்தியா அரசாங்கத்திடமிருந்து பெற்றுக்கொண்ட நிதி உதவியைக் கொண்டு கோவில்கள் மற்றும் பௌத்த விகாரைகளை மேம்படுத்தும் பணிகளைப் புரிந்துணர்வுடன் முன்னெடுப்பது தொடர்பிலும் இங்கு ஆலோசிக்கப்பட்டுள்ளது.

அத்துடன், நாடு நெருக்கடியை எதிர்கொண்டுள்ள நிலையில் நாட்டின் பொருளாதார ஸ்திரத்தன்மையை உறுதி செய்வதற்கும் மக்களின் பாதுகாப்பிற்கும் அவசியமான செயற்பாடுகளை முன்னெடுக்குமாறு வலியுறுத்திய மகாநாயக்க தேரர், அமரர் ஆறுமுகன் தொண்டமான் மற்றும் அமைச்சர் ஜீவன் தொண்டமான் ஆகியோர் மூலம் அஸ்கிரிய பீடத்திற்குக் கிடைத்த உதவிகளுக்கும் நன்றி தெரிவித்துள்ளார்.

மேலும் இளம் அரசியல் தலைவர் என்ற வகையில் துடிப்புடன் செயற்படும் அதேநேரம், நாட்டின் அபிவிருத்தி மற்றும் இன நல்லிணக்கத்திற்கான பணிகளை முன்னெடுப்பதோடு அனைவரினதும் ஒற்றுமையைப் பாதுகாக்குமாறும் கேட்டுக்கொண்டுள்ளார்.

இந்த சந்திப்பின் போது, அமைச்சருடன், இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் உப தலைவரும், பெருந்தோட்ட மனிதவள அபிவிருத்தி நிதியத்தின் தலைவருமான பாரத் அருள்சாமி உட்பட சில முக்கியஸ்தர்களும் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.


அஸ்கிரிய பீடாதிபதியிடம் ஆசி பெற்ற ஜீவன்: நல்லிணக்க செயற்பாடுகளை முன்னெடுப்பதாக உறுதி samugammedia கண்டி அஸ்கிரிய பீடத்தின் மகாநாயக்க தேரர் அதி வண.வரக்காகொட ஸ்ரீ ஞானரத்ன தேரரை நீர் வழங்கல் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு வசதிகள் அபிவிருத்தி அமைச்சர் ஜீவன் தொண்டமான் சந்தித்து ஆசிகளை பெற்றுள்ளார்.நேற்றைய தினம் (20.05.2023) இடம்பெற்றுள்ள இச்சந்திப்பில், மகாநாயக்கர்களின் ஆசியுடன் இந்து மற்றும் பௌத்த மத நல்லிணக்கத்திற்கான பல்வேறு செயற்பாடுகளை முன்னெடுக்க உள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.அத்தோடு மறைந்த பெருந் தலைவர்களான சௌமியமூர்த்தி தொண்டமான், ஆறுமுகன் தொண்டமான் ஆகியோரின் காலம் தொட்டு கண்டி அஸ்கிரிய பீடத்துடன் நல்லதொரு தொடர்பை பேணி வருவதையும் அமைச்சர் நினைவுகூர்ந்துள்ளார்.மேலும், இந்தியா அரசாங்கத்திடமிருந்து பெற்றுக்கொண்ட நிதி உதவியைக் கொண்டு கோவில்கள் மற்றும் பௌத்த விகாரைகளை மேம்படுத்தும் பணிகளைப் புரிந்துணர்வுடன் முன்னெடுப்பது தொடர்பிலும் இங்கு ஆலோசிக்கப்பட்டுள்ளது.அத்துடன், நாடு நெருக்கடியை எதிர்கொண்டுள்ள நிலையில் நாட்டின் பொருளாதார ஸ்திரத்தன்மையை உறுதி செய்வதற்கும் மக்களின் பாதுகாப்பிற்கும் அவசியமான செயற்பாடுகளை முன்னெடுக்குமாறு வலியுறுத்திய மகாநாயக்க தேரர், அமரர் ஆறுமுகன் தொண்டமான் மற்றும் அமைச்சர் ஜீவன் தொண்டமான் ஆகியோர் மூலம் அஸ்கிரிய பீடத்திற்குக் கிடைத்த உதவிகளுக்கும் நன்றி தெரிவித்துள்ளார்.மேலும் இளம் அரசியல் தலைவர் என்ற வகையில் துடிப்புடன் செயற்படும் அதேநேரம், நாட்டின் அபிவிருத்தி மற்றும் இன நல்லிணக்கத்திற்கான பணிகளை முன்னெடுப்பதோடு அனைவரினதும் ஒற்றுமையைப் பாதுகாக்குமாறும் கேட்டுக்கொண்டுள்ளார்.இந்த சந்திப்பின் போது, அமைச்சருடன், இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் உப தலைவரும், பெருந்தோட்ட மனிதவள அபிவிருத்தி நிதியத்தின் தலைவருமான பாரத் அருள்சாமி உட்பட சில முக்கியஸ்தர்களும் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement

Advertisement