சுகாதார அமைச்சராக கடமையாற்றிய நான் சுற்றாடல் அமைச்சராக நியமிக்கப்பட்டதில் ஆச்சரியமோ ஆட்சேபனையோ இல்லை என சுற்றாடல் அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார்.
அமைச்சர் பதவி மாற்றம் எப்போது வேண்டுமானாலும் நிகழலாம் என்றும், வரலாறு நெடுகிலும் இதே விஷயம்தான் நடந்துள்ளது என்றும் அவர் கூறினார்.
பத்தரமுல்லையில் அமைந்துள்ள சுற்றாடல் அமைச்சில் இடம்பெற்ற பதவிப்பிரமாண நிகழ்வின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த அவர்,
தனது அமைச்சு மாற்றத்தினால் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன அதிர்ச்சியடைந்துள்ளதாக தாம் நம்பவில்லை எனவும், ஆனால் அது தொடர்பில் கட்சிக்கு சில கேள்விகள் இருக்கலாம் எனவும் தெரிவித்தார்.
சுற்றுச்சூழல் அமைச்சர் என்ற ரீதியில், பாதுகாக்கப்பட்ட பகுதியை தனது அதிகபட்ச பலத்துடன் பாதுகாக்க நடவடிக்கை எடுப்பேன் என்றார்
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பொதுச் செயலாளர் சாகர காரியவசம், பாராளுமன்ற உறுப்பினர்களான சஞ்சீவ எதிரிமான்ன, பிரேமநாத் சி. தொலவத்த மற்றும் சுற்றாடல் அமைச்சின் உயர் அதிகாரிகள் பலர் கலந்துகொண்டனர்.
அமைச்சர் பதவியில் ஏற்பட்ட மாற்றம் - கெஹலிய வெளியிட்ட அதிரடி கருத்து. samugammedia சுகாதார அமைச்சராக கடமையாற்றிய நான் சுற்றாடல் அமைச்சராக நியமிக்கப்பட்டதில் ஆச்சரியமோ ஆட்சேபனையோ இல்லை என சுற்றாடல் அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார்.அமைச்சர் பதவி மாற்றம் எப்போது வேண்டுமானாலும் நிகழலாம் என்றும், வரலாறு நெடுகிலும் இதே விஷயம்தான் நடந்துள்ளது என்றும் அவர் கூறினார்.பத்தரமுல்லையில் அமைந்துள்ள சுற்றாடல் அமைச்சில் இடம்பெற்ற பதவிப்பிரமாண நிகழ்வின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த அவர், தனது அமைச்சு மாற்றத்தினால் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன அதிர்ச்சியடைந்துள்ளதாக தாம் நம்பவில்லை எனவும், ஆனால் அது தொடர்பில் கட்சிக்கு சில கேள்விகள் இருக்கலாம் எனவும் தெரிவித்தார்.சுற்றுச்சூழல் அமைச்சர் என்ற ரீதியில், பாதுகாக்கப்பட்ட பகுதியை தனது அதிகபட்ச பலத்துடன் பாதுகாக்க நடவடிக்கை எடுப்பேன் என்றார்ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பொதுச் செயலாளர் சாகர காரியவசம், பாராளுமன்ற உறுப்பினர்களான சஞ்சீவ எதிரிமான்ன, பிரேமநாத் சி. தொலவத்த மற்றும் சுற்றாடல் அமைச்சின் உயர் அதிகாரிகள் பலர் கலந்துகொண்டனர்.