• May 18 2024

காஸாவில் இனப்படுகொலை...! கொழும்பில் வெடிக்கவுள்ள போராட்டம்...!samugammedia

Sharmi / Oct 25th 2023, 1:36 pm
image

Advertisement

காஸா மீதான இஸ்ரேலின் முற்றுகையை  நிறுத்துமாறு கோரி நாளையதினம் கொழும்பில் எதிர்ப்பு ஆர்ப்பாட்டமொன்று  இடம்பெறவுள்ளது.

இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

காஸாவில் இரண்டு மில்லியனுக்கும் அதிகமான மக்களை சிறைபிடித்து, அவர்களுக்கு தண்ணீர், மின்சாரம், எரிபொருள், மருந்து போன்ற அத்தியாவசியப் பொருட்களை வழங்க மறுத்து, விமானம் மற்றும் ஏவுகணைத் தாக்குதல்களை நடத்தி வரும் இஸ்ரேலிய அவசரகால தேசிய அரசாங்கம் உடனடியாக இனப்படுகொலையை நிறுத்துமாறு கொழும்பு நடவடிக்கை குழு கண்டனம் வெளியிட்டுள்ளது.

இந்நிலையில், அனைத்து தொழிலாளர்கள், இளைஞர்கள் மற்றும் முற்போக்காளர்களும் பலஸ்தீன மக்களின் பாதுகாப்பிற்காக அணி திரள வேண்டும் எனவும் கொழும்பு நடவடிக்கை குழு வலியுறுத்தியுள்ளது.

இந்நிலையில், காஸா முற்றுகையை உடனடியாக நீக்குமாறும், பலஸ்தீனப் பகுதிகளை ஆக்கிரமிப்பதை உடனடியாக நிறுத்துமாறும் கோரி நாளை (26) மாலை 3.30 மணிக்கு கொழும்பு கோட்டை பிரதான ரயில் நிலையத்துக்கு அருகில் எதிர்ப்பு ஆர்ப்பாட்டமொன்று கொழும்பு நடவடிக்கை குழுவினரால் முன்னெடுக்கப்படவுள்ளது.

இன்று முழு ஏகாதிபத்திய அமைப்பும் மூன்றாம் உலகப் போருக்கான திட்டங்களை வகுத்து வருவதால் பலஸ்தீன மக்களின் போராட்டத்தை பாதுகாப்பதற்காக முன்வைத்துள்ள முன்மொழிவுகளுக்கு  ஆதரவாக நிற்கும் கொழும்பு நடவடிக்கை குழு, குறித்த போராட்டத்தில் மக்களை அணி திரளுமாறு அழைப்பு விடுத்துள்ளது.


காஸாவில் இனப்படுகொலை. கொழும்பில் வெடிக்கவுள்ள போராட்டம்.samugammedia காஸா மீதான இஸ்ரேலின் முற்றுகையை  நிறுத்துமாறு கோரி நாளையதினம் கொழும்பில் எதிர்ப்பு ஆர்ப்பாட்டமொன்று  இடம்பெறவுள்ளது.இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,காஸாவில் இரண்டு மில்லியனுக்கும் அதிகமான மக்களை சிறைபிடித்து, அவர்களுக்கு தண்ணீர், மின்சாரம், எரிபொருள், மருந்து போன்ற அத்தியாவசியப் பொருட்களை வழங்க மறுத்து, விமானம் மற்றும் ஏவுகணைத் தாக்குதல்களை நடத்தி வரும் இஸ்ரேலிய அவசரகால தேசிய அரசாங்கம் உடனடியாக இனப்படுகொலையை நிறுத்துமாறு கொழும்பு நடவடிக்கை குழு கண்டனம் வெளியிட்டுள்ளது.இந்நிலையில், அனைத்து தொழிலாளர்கள், இளைஞர்கள் மற்றும் முற்போக்காளர்களும் பலஸ்தீன மக்களின் பாதுகாப்பிற்காக அணி திரள வேண்டும் எனவும் கொழும்பு நடவடிக்கை குழு வலியுறுத்தியுள்ளது.இந்நிலையில், காஸா முற்றுகையை உடனடியாக நீக்குமாறும், பலஸ்தீனப் பகுதிகளை ஆக்கிரமிப்பதை உடனடியாக நிறுத்துமாறும் கோரி நாளை (26) மாலை 3.30 மணிக்கு கொழும்பு கோட்டை பிரதான ரயில் நிலையத்துக்கு அருகில் எதிர்ப்பு ஆர்ப்பாட்டமொன்று கொழும்பு நடவடிக்கை குழுவினரால் முன்னெடுக்கப்படவுள்ளது.இன்று முழு ஏகாதிபத்திய அமைப்பும் மூன்றாம் உலகப் போருக்கான திட்டங்களை வகுத்து வருவதால் பலஸ்தீன மக்களின் போராட்டத்தை பாதுகாப்பதற்காக முன்வைத்துள்ள முன்மொழிவுகளுக்கு  ஆதரவாக நிற்கும் கொழும்பு நடவடிக்கை குழு, குறித்த போராட்டத்தில் மக்களை அணி திரளுமாறு அழைப்பு விடுத்துள்ளது.

Advertisement

Advertisement

Advertisement