முல்லைத்தீவு கொக்குத்தொடுவாய் மனித புதைகுழியின் இரண்டாம் கட்ட அகழ்வு பணியின் 6வது நாளான இன்றைய தினமும் 5 மனித எலும்பு கூட்டு தொகுதிகள் மீட்கப்பட்டுள்ளது.
அத்துடன், துப்பாக்கி சிதறல்கள், சன்னங்கள் மீட்கப்பட்டுள்ளதுடன் கையில் அணியப்படும் இலக்கத்தகடும் மணிக்கூடு ஒன்றும் மீட்கப்பட்டுள்ளதாக சட்ட வைத்திய அதிகாரி க.வாசுதேவா தெரிவித்துள்ளார்.
மேலும் அகழ்வுப்பணிகள் நாளை(26) இடம்பெறாது எனவும் நாளை மறுதினம் (27) அகழ்வு பணிகள் தொடர்ந்து இடம்பெறவுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.