• May 19 2024

கோராவெளி கண்ணகி அம்மன் ஆலய வருடாந்த சடங்கு உற்சவத்தின் தீ மிதிப்பு samugammedia

Chithra / Jun 4th 2023, 6:52 pm
image

Advertisement

வாழைச்சேனை - புதுக்குடியிருப்பு கோராவெளி கண்ணகி அம்மன் ஆலய வருடாந்த சடங்கு உற்சவத்தின் தீமிதிப்பு இன்று ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்றது.

கடந்த புதன்கிழமை திருக்கதவு திறத்தலுடன் ஆரம்பமான சடங்கு உற்சவம் இன்று ஞாயிற்றுக்கிழமை தீமிதிப்பு மற்றும் திருக்குளிர்த்தியுடன் நிறைவு பெற்றது.

தீ மிதிப்பில் நூற்றுக்கணக்கில் சிறுவர் முதல் பெரியவர்கள் வரை தங்கள் வேண்டுதலை வேண்டி தீ மிதிப்பில் ஈடுபட்டனர்.

மட்டக்களப்பு மாவட்ட இந்து இளைஞர் பேரவை தலைவரும், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான கலாநிதி சீ.யோகேஸ்வரனால் பூசைகள் யாவும் இடம்பெற்றது.

வியாழக்கிழமை அன்று கல்யாணகால் வெட்டுதல், திருக்கல்யாணம் என்பன இடம்பெற்று, சனிக்கிழமை மடிப்பிச்சை  எடுத்தல், நெல்குற்றும் சடங்கு என்பன இடம்பெற்றதுடன் ஞாயிற்றுக்கிழமை காலை திருக்குளிர்த்தி பாடலுடன் இனிதே சடங்கு நிறைவடைந்தது.


கோராவெளி கண்ணகி அம்மன் ஆலய வருடாந்த சடங்கு உற்சவத்தின் தீ மிதிப்பு samugammedia வாழைச்சேனை - புதுக்குடியிருப்பு கோராவெளி கண்ணகி அம்மன் ஆலய வருடாந்த சடங்கு உற்சவத்தின் தீமிதிப்பு இன்று ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்றது.கடந்த புதன்கிழமை திருக்கதவு திறத்தலுடன் ஆரம்பமான சடங்கு உற்சவம் இன்று ஞாயிற்றுக்கிழமை தீமிதிப்பு மற்றும் திருக்குளிர்த்தியுடன் நிறைவு பெற்றது.தீ மிதிப்பில் நூற்றுக்கணக்கில் சிறுவர் முதல் பெரியவர்கள் வரை தங்கள் வேண்டுதலை வேண்டி தீ மிதிப்பில் ஈடுபட்டனர்.மட்டக்களப்பு மாவட்ட இந்து இளைஞர் பேரவை தலைவரும், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான கலாநிதி சீ.யோகேஸ்வரனால் பூசைகள் யாவும் இடம்பெற்றது.வியாழக்கிழமை அன்று கல்யாணகால் வெட்டுதல், திருக்கல்யாணம் என்பன இடம்பெற்று, சனிக்கிழமை மடிப்பிச்சை  எடுத்தல், நெல்குற்றும் சடங்கு என்பன இடம்பெற்றதுடன் ஞாயிற்றுக்கிழமை காலை திருக்குளிர்த்தி பாடலுடன் இனிதே சடங்கு நிறைவடைந்தது.

Advertisement

Advertisement

Advertisement