குருந்தூர் மலை விவகாரம் தொடர்பான விசாரணைகளுக்காக இன்று(04.07.2023) முல்லைத்தீவு நீதவான் நேரில் சென்று பார்வையிட்டுள்ளார்.
இதன்போது சரத் வீரசேகர உள்ளிட்ட அரசியல்வாதிகள் மற்றும் சட்டத்தரணிகள் பலர் குருந்தூர் மலைக்கு சென்றுள்ளனர்.
குருந்தூர் மலை தொடர்பான வழக்கு விசாரணை இன்று முல்லைத்தீவு நீதவான் நீதிமன்றத்தில் எடுத்துக்கொள்ளப்படவுள்ளது.
இந்நிலையில் முல்லைத்தீவு நீதவான், தொல்பொருள்திணைக் களத்தினர் மற்றும் சட்டத்தரணிகள் நேரில் சென்று ஆராய்ந்துள்ளனர்.