யாழ்ப்பாணம், வடமராட்சி கிழக்கு பகுதியில் தொடர்ந்து நான்காவது நாளாகவும் காணி அளவீட்டு முயற்சி முன்னெடுக்கப்பட்டிருந்த நிலையில் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளது.
வடமராட்சி கிழக்கு செம்பியன்பற்று வடக்கு பகுதியில் உள்ள தனியார் ஒருவருக்கு சொந்தமான ஒன்றரை பரப்பு காணியை கடற்படையினருக்காக அபகரிக்கும் நோக்கில் இன்று அளவீட்டு பணி முன்னெடுக்கப்பட்டிருந்தது.
இதற்கு காணி உரிமையாளர், கிராம மக்கள்,அரசியல் கட்சியினர் எதிர்ப்பினை தெரிவித்ததை அடுத்து காணி அளவீட்டு பணி தற்காலிகமாக கைவிடப்பட்டுள்ளது.
முன்னதாக கடந்த மூன்று நாட்களாக வடமராட்சி கிழக்கு பிரதேசத்தில் இவ்வாறு கடற்படையினருக்கு காணியை அபகரிக்கும் வகையில் முன்னெடுக்கப்பட்ட காணி அளவீடு முயற்சி தடுத்து நிறுத்தப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.