நாட்டில் சமையல் எரிவாயுவிற்கு தட்டுப்பாடு நிலவுவதாக பல்வேறு வதந்திகள் பரப்பப்பட்டாலும் சந்தையில் எரிவாயு தட்டுப்பாடு ஏற்படவில்லை என லாஃப்ஸ் கேஸ் நிறுவனத்தின் பிரதம நிறைவேற்று அதிகாரி நலிந்த குருகுலசூரிய தெரிவித்துள்ளார்.
ஒரு மாதத்திற்கு போதுமான சமயல் எரிவாயுக்கள் சேமிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இது தொடர்பில் அறிக்கையொன்றும் வெளியிடப்பட்டுள்ளது.
வாடிக்கையாளர்களுக்கும், பொதுமக்களுக்கும் தேவையான எரிவாயுக்கள் உள்ளதாகவும் அத்தடன் நாடளாவிய ரீதியில் அதனை விநியோகித்து வருவதாகவும் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
மூலோபாய ரீதியாக திட்டமிட்டு, நாடு முழுவதும் சீரான மற்றும் நம்பகமான எரிவாயு விநியோகம் உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும், அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
உள்நாட்டு நுகர்வோர், ஹோட்டல்கள் மற்றும் உணவகங்களுக்கான எரிவாயு சிலிண்டர்களை, சிரமமின்றி கொள்வனவு செய்ய முடியும் என அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.
லாஃப்ஸ் கேஸ் சமையல் எரிவாயுவிற்கு தட்டுப்பாடா.samugammedia நாட்டில் சமையல் எரிவாயுவிற்கு தட்டுப்பாடு நிலவுவதாக பல்வேறு வதந்திகள் பரப்பப்பட்டாலும் சந்தையில் எரிவாயு தட்டுப்பாடு ஏற்படவில்லை என லாஃப்ஸ் கேஸ் நிறுவனத்தின் பிரதம நிறைவேற்று அதிகாரி நலிந்த குருகுலசூரிய தெரிவித்துள்ளார்.ஒரு மாதத்திற்கு போதுமான சமயல் எரிவாயுக்கள் சேமிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.இது தொடர்பில் அறிக்கையொன்றும் வெளியிடப்பட்டுள்ளது.வாடிக்கையாளர்களுக்கும், பொதுமக்களுக்கும் தேவையான எரிவாயுக்கள் உள்ளதாகவும் அத்தடன் நாடளாவிய ரீதியில் அதனை விநியோகித்து வருவதாகவும் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.மூலோபாய ரீதியாக திட்டமிட்டு, நாடு முழுவதும் சீரான மற்றும் நம்பகமான எரிவாயு விநியோகம் உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும், அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.உள்நாட்டு நுகர்வோர், ஹோட்டல்கள் மற்றும் உணவகங்களுக்கான எரிவாயு சிலிண்டர்களை, சிரமமின்றி கொள்வனவு செய்ய முடியும் என அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.