• May 19 2024

'ஆளுநர் அலுவலகத்தை விட்டு வெளியேறு'...! வடக்கு ஆளுநருக்கு எதிராக வெடித்தது போராட்டம்..!samugammedia

Sharmi / May 19th 2023, 10:27 am
image

Advertisement

நேற்றுமுன்தினம் வடமாகாண ஆளுநராக நியமிக்கப்பட்ட திருமதி பி. எஸ்.எம் சார்ள்ஸ் இன்றையதினம் யாழ் மாவட்ட செயலகம் முன்பாக உள்ள ஆளுநர் செயலகத்தில் கடமைகளை உத்தியோகபூர்வமாக பொறுப்பேற்கும் நிகழ்வு நடைபெறவுள்ள நிலையில் பி.எஸ்.எம்.சார்ள்ஸின் நியமனத்துக்கு எதிராக இலஞ்ச ஊழலுக்கு எதிரான அமைப்பின் ஏற்பாட்டில் சற்றுமுன்  யாழ். ஆளுநர் அலுவலகத்தின் முன்னால் எதிர்ப்பு ஆர்ப்பாட்டமொன்று முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

குறித்த ஆர்ப்பாட்டத்தில் சிவசேனா, உருத்திரசேனா மற்றும் பொது அமைப்புக்கள் கலந்து கொண்டு ஆளுநருக்கு எதிராக கோசங்களை எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

அதேவேளை  வடக்கு மாகாண ஆளுநர் அலுவலகத்திற்கு முன்னால் பொலிசார் களமிறக்கப்பட்டு ஆளுநர் செயலகத்திற்குள் ஆர்ப்பாட்டகாரர்கள் உள்நுழைய முடியாதவாறு பாதுகாப்பும் பலப்படுத்தப்பட்டுள்ளது.



'ஆளுநர் அலுவலகத்தை விட்டு வெளியேறு'. வடக்கு ஆளுநருக்கு எதிராக வெடித்தது போராட்டம்.samugammedia நேற்றுமுன்தினம் வடமாகாண ஆளுநராக நியமிக்கப்பட்ட திருமதி பி. எஸ்.எம் சார்ள்ஸ் இன்றையதினம் யாழ் மாவட்ட செயலகம் முன்பாக உள்ள ஆளுநர் செயலகத்தில் கடமைகளை உத்தியோகபூர்வமாக பொறுப்பேற்கும் நிகழ்வு நடைபெறவுள்ள நிலையில் பி.எஸ்.எம்.சார்ள்ஸின் நியமனத்துக்கு எதிராக இலஞ்ச ஊழலுக்கு எதிரான அமைப்பின் ஏற்பாட்டில் சற்றுமுன்  யாழ். ஆளுநர் அலுவலகத்தின் முன்னால் எதிர்ப்பு ஆர்ப்பாட்டமொன்று முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.குறித்த ஆர்ப்பாட்டத்தில் சிவசேனா, உருத்திரசேனா மற்றும் பொது அமைப்புக்கள் கலந்து கொண்டு ஆளுநருக்கு எதிராக கோசங்களை எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.அதேவேளை  வடக்கு மாகாண ஆளுநர் அலுவலகத்திற்கு முன்னால் பொலிசார் களமிறக்கப்பட்டு ஆளுநர் செயலகத்திற்குள் ஆர்ப்பாட்டகாரர்கள் உள்நுழைய முடியாதவாறு பாதுகாப்பும் பலப்படுத்தப்பட்டுள்ளது.

Advertisement

Advertisement

Advertisement