• May 20 2024

சாணக்கியனுக்கு எதிராக சட்ட நடவடிக்கை...! பிள்ளையான் கட்சி அதிரடி..! samugammedia

Sharmi / Aug 15th 2023, 4:14 pm
image

Advertisement

தமிழ் தேசிய கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரான இரா.சாணக்கியன் மீது சட்ட நடவடிக்கை எடுக்க உள்ளோம் என தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் செயலாளரும் முன்னாள் மாகாண சபை உறுப்பினருமான பு. பிரசாந்தன் தெரிவித்துள்ளார்.

தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் அலுவலகத்தில் இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

எமது கட்சியின் தலைவரும் இராஜாங்க அமைச்சருமான. சந்திரகாந்தனுக்கு எதிராக சாணக்கியன் தொடர்ச்சியாக பொது வழிகளிலும் அபிவிருத்தி குழு கூட்டங்களிலும். உண்மைக்கு புறம்பான செய்திகளை  தெரிவித்து வருவதனால் அவருக்கு எதிராக. சட்ட நடவடிக்கை எடுக்கவிருக்கிறோம்.

அதிலும். உயிர்த்த ஞாயிறு குண்டு வெடிப்பு தொடர்பாக. அவர் அண்மையில் தெரிவித்த கருத்துக்கு  சம்பந்தமாக வக்கீல் நோட்டீஸ் அனுப்பி இருக்கிறோம்.

குறிப்பாக. எமது அரசியல் இருப்பை அளிக்கும் நோக்குடனும். குண்டு வெடிப்புடன் சம்பந்தப்படுத்திய கூற்றுக்கு எதிராகவும். நாம் அவருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்க உள்ளோம்  அவர் தெரிவித்த கருத்துக்கள் உண்மைக்கு புறம்பானவை என அவர் ஒத்துக் கொள்ளாத பட்சத்தில் அவருக்கு எதிராக நீதிமன்ற நடவடிக்கைகளை நாம் முன்னெடுக்க உள்ளோம் என தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் செயலாளரும் முன்னாள் மாகாண சபை உறுப்பினருமான பு. பிரசாந்தன் தெரிவித்தார்.




சாணக்கியனுக்கு எதிராக சட்ட நடவடிக்கை. பிள்ளையான் கட்சி அதிரடி. samugammedia தமிழ் தேசிய கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரான இரா.சாணக்கியன் மீது சட்ட நடவடிக்கை எடுக்க உள்ளோம் என தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் செயலாளரும் முன்னாள் மாகாண சபை உறுப்பினருமான பு. பிரசாந்தன் தெரிவித்துள்ளார்.தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் அலுவலகத்தில் இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.அவர் மேலும் தெரிவிக்கையில்,எமது கட்சியின் தலைவரும் இராஜாங்க அமைச்சருமான. சந்திரகாந்தனுக்கு எதிராக சாணக்கியன் தொடர்ச்சியாக பொது வழிகளிலும் அபிவிருத்தி குழு கூட்டங்களிலும். உண்மைக்கு புறம்பான செய்திகளை  தெரிவித்து வருவதனால் அவருக்கு எதிராக. சட்ட நடவடிக்கை எடுக்கவிருக்கிறோம். அதிலும். உயிர்த்த ஞாயிறு குண்டு வெடிப்பு தொடர்பாக. அவர் அண்மையில் தெரிவித்த கருத்துக்கு  சம்பந்தமாக வக்கீல் நோட்டீஸ் அனுப்பி இருக்கிறோம். குறிப்பாக. எமது அரசியல் இருப்பை அளிக்கும் நோக்குடனும். குண்டு வெடிப்புடன் சம்பந்தப்படுத்திய கூற்றுக்கு எதிராகவும். நாம் அவருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்க உள்ளோம்  அவர் தெரிவித்த கருத்துக்கள் உண்மைக்கு புறம்பானவை என அவர் ஒத்துக் கொள்ளாத பட்சத்தில் அவருக்கு எதிராக நீதிமன்ற நடவடிக்கைகளை நாம் முன்னெடுக்க உள்ளோம் என தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் செயலாளரும் முன்னாள் மாகாண சபை உறுப்பினருமான பு. பிரசாந்தன் தெரிவித்தார்.

Advertisement

Advertisement

Advertisement