புத்தரை அவமதித்து கிறிஸ்தவ மத போதகரான ஜெரோம் பெர்னாண்டோவுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்க தீர்மானித்துள்ளதாக மண்ணைக் காப்பாற்றும்
தேசிய இயக்கத்தின் தலைவரும் தர்மயாதனாதித தலைவருமான எல்லே குணவம்ச தேரர் தெரிவித்துள்ளார்.
கிறிஸ்தவ மத போதகரின் கருத்தை; வன்மையாகக் கண்டிப்பதாகவும் எல்லே குணவம்ச தேரர் மேலும் தெரிவித்துள்ளார்.
நேற்று இ;டம்பெற்ற ஊடகசந்திப்பில் அவர் இவ்வாறு தெரிவித்திருந்தார்.
இன, ஜாதி, மத பேதங்களை உருவாக்கி கருத்துகளை வெளியிடவோ, செயற்படவோ எவருக்கும் இடமளிக்கக் கூடாது எனவும், இந்த நாட்டிலுள்ள நல்லிணக்கத்தையும் உலகிற்கு எடுத்துக்காட்டவேண்டும்
எனவே இதற்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் எல்லே குணவம்ச தேரர் தெரிவித்துள்ளார்.
நாடு பிளவுபட்டாலும் நாட்டிலுள்ள மக்கள் பிளவுபடாமல் இருப்பது முக்கியம். இன்று இந்த பல பிரச்சினைகளுக்கு பின்னால் அரசியல்வாதிகள் உள்ளனர். எனவே, அரசியல்வாதிகளிடமிருந்து நாட்டைக் காப்பாற்ற வேண்டும்.
இந்த விடயத்தில் நாடுகளுக்கிடையிலான சகவாழ்வு மிகவும் முக்கியமானது எனவும் எல்லே குணவம்ச தேரர் மேலும் தெரிவித்துள்ளார்.