பொதுஜன பெரமுனவினர் தற்போது சாம்பல் மேட்டில் இருந்து மீண்டெழுந்து பயணத்தை மேற்கொண்டு வருவதாக நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.எம்.சந்திரசேன தெரிவித்துள்ளார்.
கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இதனை தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் தீர்மானிக்கும் சக்தியாக இருக்கும் எனவும் எவராலும் பொதுஜன பெரமுன கட்சியை அழிக்க முடியாது எனவும் தெரிவித்தார்.
அதேவேளை கடந்த வருடம் எமது கட்சியின் ஆதரவாளர்கள் பேரவாவிக்குள் தள்ளப்பட்டனர் அத்துடன் பாராளுமன்ற உறுப்பினர்களின் வீடுகளும் எரிக்கப்பட்டன. எமது கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் உறுப்பினர் ஒருவர் கொல்லப்பட்டார்.
இந்நிலையில் தற்போது சாம்பல் மேட்டில் இருந்து மீண்டெழுந்து பயணத்தை மேற்கொண்டுவருகின்றோம். யார் என்ன செய்தாலும் பொதுஜன பெரமுனவை அழிக்க முடியாது எனவும் தெரிவித்தார்.
பீனிக்ஸ் பறவை போல மீண்டும் எழுவோம். மஹிந்த தரப்பு சூளுரை.samugammedia பொதுஜன பெரமுனவினர் தற்போது சாம்பல் மேட்டில் இருந்து மீண்டெழுந்து பயணத்தை மேற்கொண்டு வருவதாக நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.எம்.சந்திரசேன தெரிவித்துள்ளார்.கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இதனை தெரிவித்தார்.அவர் மேலும் தெரிவிக்கையில்,எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் தீர்மானிக்கும் சக்தியாக இருக்கும் எனவும் எவராலும் பொதுஜன பெரமுன கட்சியை அழிக்க முடியாது எனவும் தெரிவித்தார்.அதேவேளை கடந்த வருடம் எமது கட்சியின் ஆதரவாளர்கள் பேரவாவிக்குள் தள்ளப்பட்டனர் அத்துடன் பாராளுமன்ற உறுப்பினர்களின் வீடுகளும் எரிக்கப்பட்டன. எமது கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் உறுப்பினர் ஒருவர் கொல்லப்பட்டார்.இந்நிலையில் தற்போது சாம்பல் மேட்டில் இருந்து மீண்டெழுந்து பயணத்தை மேற்கொண்டுவருகின்றோம். யார் என்ன செய்தாலும் பொதுஜன பெரமுனவை அழிக்க முடியாது எனவும் தெரிவித்தார்.