உள்ளுராட்சி மன்ற தேர்தல் திட்டமிட்டவாறு நடைபெற வேண்டும் என தேர்தல் ஆய்வுகள் அமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது.
இதேவேளை இலங்கையில் 6 தேர்தல் ஆய்வுகள் அமைப்புக்கள் காணப்படுவதுடன், அவற்றில் ஒரு அமைப்பேனும் எதிர்ப்பினை தெரிவிக்கவில்லை என ஊடக சந்திப்பில் பங்கேற்றிருந்த, சுதந்திரமானதும் நியாயமான தேர்தலுக்கான மக்கள் அமைப்பின் நிறைவேற்றுப் பணிப்பாளர் ரோஹன ஹெட்டியாராச்சி தெரிவித்துள்ளார்.
கொழும்பில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போதே அவர் இவ்வாறு கருத்து தெரிவித்தார்.
எனவே தேர்தல் திட்டமிட்டவாறு முன்னெடுக்கப்பட வேண்டும் என்ற நிலைப்பாட்டிலேயே தொடர்ந்தும் செயற்படுவதாக குறிப்பிட்டுள்ளார்.