2024 ஆம் ஆண்டுக்கான வரவு - செலவுத்திட்டம் தொடர்பில் கருத்த்துக்கூற முன்னாள் ஜனாதிபதியும் பொதுஜன பெரமுனவின் தலைவருமான மஹிந்த ராஜபக்ச மறுத்து விட்டார்.
இருந்தபோதும் ஊடகவியலாளர்கள் அவரிடம் தொடர்ந்து கேட்டபோது,
நான் வரவு - செலவுத்திட்ட அறிக்கையை முழுமையாக இன்னும் படிக்கவில்லை. அதனால் உடனடியாக என்னிடம் கேட்டால் நான் எப்படி கருத்துக் கூற முடியும்? இது தொடர்பாக நன்கு அறிந்தவர்களிடம் கேளுங்கள். நான் படித்த பின்னர் கூறுகின்றேன்.
வரவு செலவு திட்டத்தில் ஆதரவளிக்கக்கூடிய நல்ல விடயங்களுக்கு தமது கட்சி ஆதரவளிக்கும்.
வரவு செலவுத் திட்டம் தொடர்பில் தமது கட்சியின் கருத்துகள் குறித்து இதுவரை கலந்துரையாடப்படவில்லை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
உடனடியாக எதனையும் கூறிவிட முடியாது. பொறுமையாக பதிலளிப்போம் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
அரச ஊழியர்களுக்கான வாழ்க்கைச்செலவு அதிகரிக்கப்பட்டிருக்கிறது. இது நல்ல விடயம் என்றார்.
வரவு - செலவுத் திட்டம் தொடர்பில் கருத்துக்கூற மறுத்த மஹிந்த. samugammedia 2024 ஆம் ஆண்டுக்கான வரவு - செலவுத்திட்டம் தொடர்பில் கருத்த்துக்கூற முன்னாள் ஜனாதிபதியும் பொதுஜன பெரமுனவின் தலைவருமான மஹிந்த ராஜபக்ச மறுத்து விட்டார்.இருந்தபோதும் ஊடகவியலாளர்கள் அவரிடம் தொடர்ந்து கேட்டபோது,நான் வரவு - செலவுத்திட்ட அறிக்கையை முழுமையாக இன்னும் படிக்கவில்லை. அதனால் உடனடியாக என்னிடம் கேட்டால் நான் எப்படி கருத்துக் கூற முடியும் இது தொடர்பாக நன்கு அறிந்தவர்களிடம் கேளுங்கள். நான் படித்த பின்னர் கூறுகின்றேன்.வரவு செலவு திட்டத்தில் ஆதரவளிக்கக்கூடிய நல்ல விடயங்களுக்கு தமது கட்சி ஆதரவளிக்கும்.வரவு செலவுத் திட்டம் தொடர்பில் தமது கட்சியின் கருத்துகள் குறித்து இதுவரை கலந்துரையாடப்படவில்லை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.உடனடியாக எதனையும் கூறிவிட முடியாது. பொறுமையாக பதிலளிப்போம் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.அரச ஊழியர்களுக்கான வாழ்க்கைச்செலவு அதிகரிக்கப்பட்டிருக்கிறது. இது நல்ல விடயம் என்றார்.