வடக்கில் உள்ள கடற்றொழில் நீரியல் திணைக்களங்களுக்கு சாரதி பதிவிக்கு இரு சிங்கள உத்தியோகத்தர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
யாழ்ப்பாணம் மற்றும் கிளிநொச்சி மாவட்ட திணைக்களங்களுக்கே இரு சிங்கள சாரதிகள் நேற்று முன்தினம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
ஒரு லட்சம் வேலை வாய்ப்புச் செயலணியில் நியமனம் பெற்ற இருவரே இவ்வாறு யாழ்ப்பாணம், கிளிநொச்சிக்கு நியமிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
கடந்த சில தினங்களுக்கு முன்னர் யாழ் மாவட்டத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் அமைச்சரொருவர் ஒரு லட்சம் செயலணியின் மூலம் வடக்கில் நியமிக்கப்பட்ட சிங்கள இனத்தவர்கள் திருப்பி அனுப்பப்படுவர் எனத் தெரிவித்த நிலையிலேயே குறித்த நியமனம் வழங்கப்பட்டுள்ளது.