• May 17 2024

மட்டக்களப்பில் பௌத்தர்களின் மயானத்தில் கற்பாறைகளை கொட்டியவர் கைது! samugammedia

Chithra / Oct 27th 2023, 8:32 am
image

Advertisement


மட்டக்களப்பு ஜெயந்திபுரத்தில் உள்ள பௌத்தர்களின் மயானத்தில் சட்டவிரோதமாக கற்பாறைகளைக் கொட்டிய நபர் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார்.

கடந்த சில வாரங்களுக்கு முன்னர் குறித்த பகுதியில் வீதி நிர்மாணப் பணிகளை செய்துவந்த ஒப்பந்தகாரரான குறித்த நபர் மேலதிக கற்பாறைகளை கனகரக வாகனத்தில் கொண்டு சென்று மயானத்துக்குள் கொட்டியுள்ளார்.

இதனையடுத்து இது தொடர்பாக ஜெயந்திபுர விகாரை விகாராதிபதி பொலிஸ் நிலையத்தில் கடந்த 3 தினங்களுக்கு முன்னர் முறைப்பாடு  செய்தபோதிலும், பொலிஸார் எவ்வித நடவடிக்கைகளும் எடுக்கவில்லை எனக் கூறப்படுகின்றது.

இதனையடுத்து மட்டக்களப்பு மங்களராம விகாராதிபதி அம்பிட்டிய சுமணரட்ண தேரர் நேற்றைய தினம் சென்று மீண்டும் முறைப்பாடு செய்திருந்ததோடு குறித்த மயானபகுதிக்கு சென்று சநா.உறுப்பினர் சாணக்கியன் ஆட்களில் இந்த கொடூரமான வேலை என தெரிவித்து தென்பகுதியில் உள்ள தமிழர்களின் தலையை வெட்டப்போவதாகவும் புலிகள் என தெரிவித்து வீதியில் சத்தமிட்டு போராட்டத்தில் ஈடுபட்டிருந்தார்.

இந்நிலையில் பொலிஸாரினால் கைதுசெய்யப்பட்ட வீதி அபிவிருத்தி ஒப்பந்தக்காரரை மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்திய   போது, அவரை எதிர்வரும் 30 ம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

மட்டக்களப்பில் பௌத்தர்களின் மயானத்தில் கற்பாறைகளை கொட்டியவர் கைது samugammedia மட்டக்களப்பு ஜெயந்திபுரத்தில் உள்ள பௌத்தர்களின் மயானத்தில் சட்டவிரோதமாக கற்பாறைகளைக் கொட்டிய நபர் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார்.கடந்த சில வாரங்களுக்கு முன்னர் குறித்த பகுதியில் வீதி நிர்மாணப் பணிகளை செய்துவந்த ஒப்பந்தகாரரான குறித்த நபர் மேலதிக கற்பாறைகளை கனகரக வாகனத்தில் கொண்டு சென்று மயானத்துக்குள் கொட்டியுள்ளார்.இதனையடுத்து இது தொடர்பாக ஜெயந்திபுர விகாரை விகாராதிபதி பொலிஸ் நிலையத்தில் கடந்த 3 தினங்களுக்கு முன்னர் முறைப்பாடு  செய்தபோதிலும், பொலிஸார் எவ்வித நடவடிக்கைகளும் எடுக்கவில்லை எனக் கூறப்படுகின்றது.இதனையடுத்து மட்டக்களப்பு மங்களராம விகாராதிபதி அம்பிட்டிய சுமணரட்ண தேரர் நேற்றைய தினம் சென்று மீண்டும் முறைப்பாடு செய்திருந்ததோடு குறித்த மயானபகுதிக்கு சென்று சநா.உறுப்பினர் சாணக்கியன் ஆட்களில் இந்த கொடூரமான வேலை என தெரிவித்து தென்பகுதியில் உள்ள தமிழர்களின் தலையை வெட்டப்போவதாகவும் புலிகள் என தெரிவித்து வீதியில் சத்தமிட்டு போராட்டத்தில் ஈடுபட்டிருந்தார்.இந்நிலையில் பொலிஸாரினால் கைதுசெய்யப்பட்ட வீதி அபிவிருத்தி ஒப்பந்தக்காரரை மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்திய   போது, அவரை எதிர்வரும் 30 ம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement

Advertisement