பன்வில மொரகஹா ஓயா பாலத்திற்கு அருகில் சக நண்பர்களுடன் நீராடி கொண்டிருந்த நபர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளதாக பன்வில பொலிஸார் தெரிவித்தனர்.
உயிரிழந்தவர் பத்தேகம பிரதேசத்தை சேர்ந்த 40 வயதுடையவர் ஆவார்.
இவர் பிரதேசவாசிகளால் மீட்கப்பட்டு மடோல்கல வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
உயிரிழந்தவரின் சடலம் தெல்தெனிய வைத்தியசாலையில் பிரேத பரிசோனை செய்யப்பட்ட பின்னர் குடும்பத்தாரிடம் ஒப்படைக்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.