• May 17 2024

ஆளில்லா தீவில் 3 நாட்களாக சிக்கித் தவித்த நபர் – மீட்ட கடலோர காவல் படை! samugammedia

Tamil nila / Aug 22nd 2023, 6:19 pm
image

Advertisement

அமெரிக்காவின் புளோரிடா மாநிலத்திற்கு கிழக்கு பகுதியில் பஹாமாஸ் உள்ளது . தீவு நாடான பஹாமாசின் கட்டுப்பாட்டில் உள்ள கேசால் என்ற ஆள்நடமாட்டம் இல்லாத சிறிய தீவில் மூன்று நாட்களாக சிக்கித்தவித்த நபரை அமெரிக்க கடலோர காவல் படையினர் பத்திரமாக மீட்டுள்ளனர்.

64 வயது நிரம்பிய அந்த நபர் பஹாமாசைச் சேர்ந்தவர். அவர் பாய்மரப் படகில் கடற்பயணம் மேற்கொண்டபோது படகு பழுதடைந்து கேசால் தீவில் தரைதட்டி நின்றுவிட்டது. அங்கிருந்து வெளியேற வழி தெரியாமல் தவித்தார். அத்துடன், அவசரகால சூழ்நிலைகளில் உதவிக்கு அழைப்பதற்காக பயன்படுத்தப்படும் சாதனமான சுடரை அவ்வப்போது எரியவிட்டார்.

இவ்வாறு மூன்று நாட்கள் ஆன நிலையில் அந்த வழியாக அமெரிக்க கடலோர காவல் படையினர் ஹெலிகாப்டரில் ரோந்து சென்றனர். அப்போது, படகில் இருந்து வெளிப்பட்ட சிவப்புநிற ஒளியை பார்த்து, யாரோ உதவிக்கு அழைப்பதை அறிந்தனர். உடனடியாக தகவல் தொடர்பை ஏற்படுத்துவதற்காக ரேடியோ கருவி மற்றும் படகில் உள்ள நபருக்கு உணவு, தண்ணீர் பாட்டில் ஆகியவற்றை கீழே போட்டனர்.

பின்னர் அந்த நபர், ரேடியோ முலம் கடலோர காவல்படையை தொடர்புகொண்டு மூன்று நாட்களாக தீவில் தவிப்பதாக கூறியிருக்கிறார். இதையடுத்து கடலோர காவல் படையினர் அந்த நபரை மீட்டு ராயல் பஹாமாஸ் பாதுகாப்பு படையினரிடம் ஒப்படைத்தனர். அவரது உடல்நிலை சீராக இருந்ததாக அதிகாரிகள் கூறி உள்ளனர்.

ஆளில்லா தீவில் 3 நாட்களாக சிக்கித் தவித்த நபர் – மீட்ட கடலோர காவல் படை samugammedia அமெரிக்காவின் புளோரிடா மாநிலத்திற்கு கிழக்கு பகுதியில் பஹாமாஸ் உள்ளது . தீவு நாடான பஹாமாசின் கட்டுப்பாட்டில் உள்ள கேசால் என்ற ஆள்நடமாட்டம் இல்லாத சிறிய தீவில் மூன்று நாட்களாக சிக்கித்தவித்த நபரை அமெரிக்க கடலோர காவல் படையினர் பத்திரமாக மீட்டுள்ளனர்.64 வயது நிரம்பிய அந்த நபர் பஹாமாசைச் சேர்ந்தவர். அவர் பாய்மரப் படகில் கடற்பயணம் மேற்கொண்டபோது படகு பழுதடைந்து கேசால் தீவில் தரைதட்டி நின்றுவிட்டது. அங்கிருந்து வெளியேற வழி தெரியாமல் தவித்தார். அத்துடன், அவசரகால சூழ்நிலைகளில் உதவிக்கு அழைப்பதற்காக பயன்படுத்தப்படும் சாதனமான சுடரை அவ்வப்போது எரியவிட்டார்.இவ்வாறு மூன்று நாட்கள் ஆன நிலையில் அந்த வழியாக அமெரிக்க கடலோர காவல் படையினர் ஹெலிகாப்டரில் ரோந்து சென்றனர். அப்போது, படகில் இருந்து வெளிப்பட்ட சிவப்புநிற ஒளியை பார்த்து, யாரோ உதவிக்கு அழைப்பதை அறிந்தனர். உடனடியாக தகவல் தொடர்பை ஏற்படுத்துவதற்காக ரேடியோ கருவி மற்றும் படகில் உள்ள நபருக்கு உணவு, தண்ணீர் பாட்டில் ஆகியவற்றை கீழே போட்டனர்.பின்னர் அந்த நபர், ரேடியோ முலம் கடலோர காவல்படையை தொடர்புகொண்டு மூன்று நாட்களாக தீவில் தவிப்பதாக கூறியிருக்கிறார். இதையடுத்து கடலோர காவல் படையினர் அந்த நபரை மீட்டு ராயல் பஹாமாஸ் பாதுகாப்பு படையினரிடம் ஒப்படைத்தனர். அவரது உடல்நிலை சீராக இருந்ததாக அதிகாரிகள் கூறி உள்ளனர்.

Advertisement

Advertisement

Advertisement