• May 19 2024

7 வயது சிறுமியை புதருக்கு அழைத்துச் சென்று முத்தமிட்டவருக்கு கடூழிய சிறைத்தண்டனை! samugammedia

Chithra / Sep 6th 2023, 3:38 pm
image

Advertisement

ஏழு வயது சிறுமியை வீட்டுக்கு அருகில் உள்ள புதருக்கு அழைத்துச் சென்று முத்தமிட்ட  குற்றத்தை ஒப்புக்கொண்ட 43 வயதுடைய மூன்று பிள்ளைகளின் தந்தைக்கு கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி அமல் ரணராஜா 2 வருட கடூழிய சிறைத்தண்டனை விதித்து அதனை  ஐந்தாண்டுகளுக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டார்.

மேலும், 25,000 ரூபா அபராதம் விதித்த நீதிபதி, பாதிக்கப்பட்ட சிறுமிக்கு 50,000 ரூபா இழப்பீடு வழங்கவும் உத்தரவிட்டார்.

குற்றம் சாட்டப்பட்டவர் தாம் செய்த குற்றத்துக்கு வருத்தம் தெரிவித்த நிலையில், இது தொடர்பில் பரிசீலித்த அரச தரப்பு  சட்டத்தரணி சங்க வீரசூரிய, சட்டமா அதிபரின் அங்கீகாரத்துடன் குற்றப் பத்திரிகையில் திருத்தம்   செய்த வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோதே நீதிவான் இந்த உத்தரவை பிறப்பித்தார்.

7 வயது சிறுமியை புதருக்கு அழைத்துச் சென்று முத்தமிட்டவருக்கு கடூழிய சிறைத்தண்டனை samugammedia ஏழு வயது சிறுமியை வீட்டுக்கு அருகில் உள்ள புதருக்கு அழைத்துச் சென்று முத்தமிட்ட  குற்றத்தை ஒப்புக்கொண்ட 43 வயதுடைய மூன்று பிள்ளைகளின் தந்தைக்கு கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி அமல் ரணராஜா 2 வருட கடூழிய சிறைத்தண்டனை விதித்து அதனை  ஐந்தாண்டுகளுக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டார்.மேலும், 25,000 ரூபா அபராதம் விதித்த நீதிபதி, பாதிக்கப்பட்ட சிறுமிக்கு 50,000 ரூபா இழப்பீடு வழங்கவும் உத்தரவிட்டார்.குற்றம் சாட்டப்பட்டவர் தாம் செய்த குற்றத்துக்கு வருத்தம் தெரிவித்த நிலையில், இது தொடர்பில் பரிசீலித்த அரச தரப்பு  சட்டத்தரணி சங்க வீரசூரிய, சட்டமா அதிபரின் அங்கீகாரத்துடன் குற்றப் பத்திரிகையில் திருத்தம்   செய்த வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோதே நீதிவான் இந்த உத்தரவை பிறப்பித்தார்.

Advertisement

Advertisement

Advertisement