• May 02 2024

தனது உடலுக்கு தீ வைத்து மனைவியை எரிக்க முயன்ற கணவன்! பொலிஸ் நிலையத்தில் சம்பவம் SamugamMedia

Chithra / Feb 19th 2023, 1:00 pm
image

Advertisement

மிரிஹான தலைமை பொலிஸ் நிலையத்தினுள் தனது உடலுக்கு தீ வைத்து விட்டு மனைவியை கட்டியணைக்க முயன்ற நபரொருவர் களுபோவில போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றார்.

குறித்த நபரினால் தனது மனைவிக்கு எதிராக தாக்கல்செய்யப்பட்ட முறைப்பாடு தொடர்பான விசாரணைகளுக்காக நேற்று இருவரும் வருகை தந்தபோதே இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

சந்தேகநபர் லைட்டரை பற்றவைத்து தனது உடலுக்கு தீ வைத்துக்கொண்டு, அருகில் இருந்த மனைவியை கட்டியணைக்க முயன்றுள்ளார்.


எனினும், மனைவி வெளியே ஓடி வந்து உயிர் தப்பியதாக பொலிஸார் தெரிவித்தனர்.

பின்னர், பொலிஸார், தீ வைத்துக்கொண்ட நபரை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

அதன்போது அவரது உடையில் பெட்ரோல் வாசனை வீசியதாகவும், 34 வயதான குறித்த சந்தேகநபர் போதைப்பொருள் வைத்திருந்தமை உள்ளிட்ட பல குற்றச்சாட்டுகளை எதிர்கொண்டு வருவதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

தனது உடலுக்கு தீ வைத்து மனைவியை எரிக்க முயன்ற கணவன் பொலிஸ் நிலையத்தில் சம்பவம் SamugamMedia மிரிஹான தலைமை பொலிஸ் நிலையத்தினுள் தனது உடலுக்கு தீ வைத்து விட்டு மனைவியை கட்டியணைக்க முயன்ற நபரொருவர் களுபோவில போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றார்.குறித்த நபரினால் தனது மனைவிக்கு எதிராக தாக்கல்செய்யப்பட்ட முறைப்பாடு தொடர்பான விசாரணைகளுக்காக நேற்று இருவரும் வருகை தந்தபோதே இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.சந்தேகநபர் லைட்டரை பற்றவைத்து தனது உடலுக்கு தீ வைத்துக்கொண்டு, அருகில் இருந்த மனைவியை கட்டியணைக்க முயன்றுள்ளார்.எனினும், மனைவி வெளியே ஓடி வந்து உயிர் தப்பியதாக பொலிஸார் தெரிவித்தனர்.பின்னர், பொலிஸார், தீ வைத்துக்கொண்ட நபரை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.அதன்போது அவரது உடையில் பெட்ரோல் வாசனை வீசியதாகவும், 34 வயதான குறித்த சந்தேகநபர் போதைப்பொருள் வைத்திருந்தமை உள்ளிட்ட பல குற்றச்சாட்டுகளை எதிர்கொண்டு வருவதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

Advertisement

Advertisement

Advertisement