நாளை நடைபெறவுள்ள மே தினக் கூட்டங்களுக்கு பொலிஸார் விசேட பாதுகாப்பு வேலைத்திட்டத்தை நடைமுறைப்படுத்தியுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார்.
கொழும்பு, நுகேகொடை, ஹட்டன் மற்றும் கண்டி ஆகிய நகரங்களில் இந்த பாதுகாப்பு வேலைத்திட்டம் அமுல்படுத்தவுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் நிஹால் தல்துவ மேலும் தெரிவித்துள்ளார்.
இதன்படி, குறித்த பிரதேசங்களில் போக்குவரத்து பாதுகாப்பில், அதிக கவனம் செலுத்தப்பட்டு விசேட வேலைத்திட்டமொன்றும் நடைமுறைப்படுத்தப்பட்டு வருவதாகவும் அவர் குறிப்பிட்டார்.
குறிப்பாக கொழும்பில் நடைபெறும் மே பேரணிகள் மற்றும் ஆர்ப்பாட்டங்களுக்காக 3500 பொலிஸ் உத்தியோகத்தர்கள் கடமையில் ஈடுபடவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
குறிப்பாக, பல வீதிகள் ஒரு வழிப்பாதையாக்கவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
ஏனைய வீதிகளில் செல்லும் வாகனங்களுக்கு இடையூறு ஏற்படாத வகையில், போக்குவரத்து அதிகாரிகள் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
கொழும்பில் நாளை முடங்கவுள்ள பல வீதிகள் - முக்கிய நகரங்களுக்கு விசேட பாதுகாப்பு samugammedia நாளை நடைபெறவுள்ள மே தினக் கூட்டங்களுக்கு பொலிஸார் விசேட பாதுகாப்பு வேலைத்திட்டத்தை நடைமுறைப்படுத்தியுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார்.கொழும்பு, நுகேகொடை, ஹட்டன் மற்றும் கண்டி ஆகிய நகரங்களில் இந்த பாதுகாப்பு வேலைத்திட்டம் அமுல்படுத்தவுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் நிஹால் தல்துவ மேலும் தெரிவித்துள்ளார்.இதன்படி, குறித்த பிரதேசங்களில் போக்குவரத்து பாதுகாப்பில், அதிக கவனம் செலுத்தப்பட்டு விசேட வேலைத்திட்டமொன்றும் நடைமுறைப்படுத்தப்பட்டு வருவதாகவும் அவர் குறிப்பிட்டார்.குறிப்பாக கொழும்பில் நடைபெறும் மே பேரணிகள் மற்றும் ஆர்ப்பாட்டங்களுக்காக 3500 பொலிஸ் உத்தியோகத்தர்கள் கடமையில் ஈடுபடவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.குறிப்பாக, பல வீதிகள் ஒரு வழிப்பாதையாக்கவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.ஏனைய வீதிகளில் செல்லும் வாகனங்களுக்கு இடையூறு ஏற்படாத வகையில், போக்குவரத்து அதிகாரிகள் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.