வரலாற்று சிறப்பு மிக்க மாவிட்டபுரம் கந்தசுவாமி கோவில் வருடாந்திர மகோற்சவ தேர்த்திருவிழா இன்றைய தினம்(14) நடைபெற்றது.
இன்று காலை நடைபெற்ற வசந்தமண்டப பூஜையை தொடர்ந்து , ஆறுமுகசுவாமி வள்ளி , தெய்வானை சமேதரராய் விநாயக பெருமானுடன் உள்வீதியுலா வந்து அதன்பின்னர் பக்தர்களின் அரோகரா கோஷத்துக்கு மத்தியில் தேரில் ஆரோகணித்து பக்தர்களுக்கு அருட்காட்சி அளித்தார்.
இந் நிகழ்வில் நாட்டின் பல பாகங்களிலுமிருந்தும் ஏராளமான பக்தர்கள் வருகை தந்து தமது நேர்த்திக் கடன்களை நிறைவேற்றியிருந்தமை குறிப்பிடத்தக்கது.