தனது மனைவி ஒரு தமிழ் பெண் என நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார்.
பாராளுமன்ற அமர்வில் நேற்றையதினம் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இதனை தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
தனது மனைவி ஒரு தமிழ் பெண் எனவும் கடந்த 1983ஆம் ஆண்டு ஜூலை கலவரம் நடந்த போது மனைவியை வெளியில் அழைத்துச் செல்ல முடியாத நிலைமை காணப்பட்டது.
இன, மத பேதங்களை தூண்டி மேற்கொண்டு வரும் மோசமான நடவடிக்கைகளே இதற்கு காரணம். தற்போதும் அதனை இவர்கள் செய்கின்றனர்.
நான் மதியம் சிங்கள அரிசி சோறு சாப்பிடுவதாகவும் இரவில் தோசையும் வடையையும் சாப்பிடுவதாகவும் தேர்தல் காலங்களில் பிரசாரம் செய்தனர். எனினும் மூன்று வேளையும் நான் தோசை சாப்பிடுவதாக நான் தேர்தல் மேடைகளில் கூறினேன். நான் அரசியலில் ஈடுபடுவது மக்களுக்காகவே அன்றி மனைவிக்காக அல்ல. மிக கேவலமான கதைகளை கூறுகின்றனர் எனவும் தெரிவித்தார்.