அனைத்து அரச மற்றும் அரச அனுசரணை பெற்ற பாடசாலைகளை நாளை (12) மீண்டும் திறக்கப்படவுள்ளதாக கல்வி இராஜாங்க அமைச்சர் அ. அரவிந்த் குமார தெரிவித்தார்.
சீரற்ற காலநிலை காரணமாக கடந்த வெள்ளிக்கிழமை, அனைத்து அரச மற்றும் அரச அனுசரணை பெற்ற பாடசாலைகளுக்கு விடுமுறை வழங்கப்பட்டது.
இந்தநிலையில், தற்போதைய நிலைமையை கருத்திற்கொண்டு நாளை முதல் மீண்டும் பாடசாலைகளை வழமைபோல நடத்த கற்றல் செயற்பாடுகளை முன்னெடுக்கவுள்ளதாக இராஜாங்க அமைச்சர் மேலும் தெரிவித்தார்.