முல்லைத்தீவு, மல்லாவி பாலிநகர் 3 வாய்க்கால் வயற்பகுதியிலிருந்து சடலம் ஒன்று நேற்றிரவு மீட்கப்பட்டுள்ளது
குறித்த நபரை காணவில்லை என தேடிய போதே சடலமாக அடையாளம் காணப்பட்டுள்ளார்
இல 53, கட்சன் வீதி, வட்டகச்சியை சேர்ந்த இளையதம்பி ராஜ்மோகன் (49) என்பவரே சடலமாக மீட்கப்பட்டவராவார்
துணுக்காய் விநாயகபுரம் பகுதியில் வசித்து வந்த நண்பர் ஒருவரின் வீட்டில் தங்கியிருந்தபோதே இவர் காணாமல் போயிருந்தார்.
மல்லாவி பொலிசார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.