பல மாதங்களாக நீர் கட்டணத்தை செலுத்தத் தவறிய 40,000 இற்கும் மேற்பட்ட நுகர்வோருக்கான நீர் விநியோகத்தை தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை துண்டித்துள்ளது.
தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபையின் உயர் அதிகாரி ஒருவர் கூறுகையில், நிலுவைத் தொகை ரூ. 1.6 டிரில்லியனுக்கும் அதிகமாக உள்ளது எனவும் குறிப்பிட்டார்.
இதனால் தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபையானது தற்போது கடுமையான நிதி சிக்கல்களை எதிர்நோக்கியுள்ளதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.