• May 02 2024

முல்லை நீதிமன்ற நீதிபதி பதவி விலகல் விவகாரம்...! நீதிபதியை அழைப்பதற்கு சட்டமா அதிபருக்கு அதிகாரமில்லை என்கின்றார் அம்பிகா சற்குணநாதன்...!samugammedia

Sharmi / Sep 29th 2023, 10:26 am
image

Advertisement

நீதிபதியை அழைப்பதற்கு சட்டமா அதிபருக்கு அதிகாரமில்லை என மனித உரிமை ஆணைக்குழுவின் முன்னாள் ஆணையாளர் அம்பிகா சற்குணநாதன் தெரிவித்துள்ளார்.

முல்லைத்தீவு மாவட்ட நீதிமன்ற நீதிபதி  ரீ.சரணவராஜா பதவி விலகியமை தொடர்பில் மனித உரிமை ஆணைக்குழுவின் முன்னாள் ஆணையாளர் அம்பிகா சற்குணநாதன் வெளியிட்டுள்ள ருவிட்டர் பதிவிலேயே இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது.

அதில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,

குருந்தூர்மலை விவகாரத்தில் அவர் வழங்கிய கட்டளைகளுக்காக   உயிர் அச்சுறுத்தலையும் அழுத்தங்களையும் எதிர்கொண்டதாக தெரிவித்து தனது பதவியை இராஜினாமா செய்துள்ள முல்லைத்தீவு மாவட்ட நீதிபதி ரீ.சரவணராஜா சட்டமா அதிபர் தன்னை அழைத்து நீதிமன்றக் கட்டளைகளை மாற்றியமைக்கும்படி கேட்டுக்கொண்டார் என்ற குற்றச்சாட்டையும் முன்வைத்துள்ளார்.

நீதிபதியை அழைப்பதற்கு சட்டமா அதிபருக்கு அதிகாரமில்லை, நீதிச்சேவை ஆணைக்குழுவிற்கு மாத்திரம் அதற்கான அதிகாரமுள்ளது.

ஆனால் சட்டமா அதிபர் உண்மையிலேயே அழைத்திருந்தால் அது நீதித்துறையின் சுதந்திரத்தினை குறைமதிப்பிற்கு உட்படுத்த முயலும் அரசாங்கத்தின் நோக்கத்தை அது வெளிப்படுத்துகின்றது.

சட்டமா அதிபர் திணைக்களம் அரசியல்மயப்படுத்தப்பட்டுள்ளது.என ருவிட்டர் பதிவில் குறிப்பிடப்பட்டுள்ளது.



முல்லை நீதிமன்ற நீதிபதி பதவி விலகல் விவகாரம். நீதிபதியை அழைப்பதற்கு சட்டமா அதிபருக்கு அதிகாரமில்லை என்கின்றார் அம்பிகா சற்குணநாதன்.samugammedia நீதிபதியை அழைப்பதற்கு சட்டமா அதிபருக்கு அதிகாரமில்லை என மனித உரிமை ஆணைக்குழுவின் முன்னாள் ஆணையாளர் அம்பிகா சற்குணநாதன் தெரிவித்துள்ளார்.முல்லைத்தீவு மாவட்ட நீதிமன்ற நீதிபதி  ரீ.சரணவராஜா பதவி விலகியமை தொடர்பில் மனித உரிமை ஆணைக்குழுவின் முன்னாள் ஆணையாளர் அம்பிகா சற்குணநாதன் வெளியிட்டுள்ள ருவிட்டர் பதிவிலேயே இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது.அதில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,குருந்தூர்மலை விவகாரத்தில் அவர் வழங்கிய கட்டளைகளுக்காக   உயிர் அச்சுறுத்தலையும் அழுத்தங்களையும் எதிர்கொண்டதாக தெரிவித்து தனது பதவியை இராஜினாமா செய்துள்ள முல்லைத்தீவு மாவட்ட நீதிபதி ரீ.சரவணராஜா சட்டமா அதிபர் தன்னை அழைத்து நீதிமன்றக் கட்டளைகளை மாற்றியமைக்கும்படி கேட்டுக்கொண்டார் என்ற குற்றச்சாட்டையும் முன்வைத்துள்ளார்.நீதிபதியை அழைப்பதற்கு சட்டமா அதிபருக்கு அதிகாரமில்லை, நீதிச்சேவை ஆணைக்குழுவிற்கு மாத்திரம் அதற்கான அதிகாரமுள்ளது.ஆனால் சட்டமா அதிபர் உண்மையிலேயே அழைத்திருந்தால் அது நீதித்துறையின் சுதந்திரத்தினை குறைமதிப்பிற்கு உட்படுத்த முயலும் அரசாங்கத்தின் நோக்கத்தை அது வெளிப்படுத்துகின்றது.சட்டமா அதிபர் திணைக்களம் அரசியல்மயப்படுத்தப்பட்டுள்ளது.என ருவிட்டர் பதிவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Advertisement

Advertisement

Advertisement