• Oct 29 2024

விமானநிலையத்தில் தொடர் விசாரணைக்குள் முருகன், பயஸ், ஜெயக்குமார்...!

Chithra / Apr 3rd 2024, 1:35 pm
image

Advertisement

 

இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜிவ் காந்தி கொலைக் குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு   33 ஆண்டுகள் வரை சிறையிலிருந்து கடந்த ஒன்றரை ஆண்டுகளுக்கு முன்னர் விடுவிக்கப்பட்டு, திருச்சி சிறப்பு முகாமில் தடுத்து வைக்கப்பட்டுள்ள முருகன், ரொபேர்ட் பயஸ் மற்றும் ஜெயக்குமார் ஆகியோர் இன்று காலை இலங்கையை  வந்தடைந்ததனர் 

இவர்கள் தற்போதுவரை விசாரணைக்குட்படுத்தப்பட்டுள்ளனர். இவர்களை அழைத்துச்செல்லச் சென்ற உறவுகள் இவர்களின் வருகைக்காக காத்துநிற்கின்றனர். 

இவர்கள் மூவருக்குமான விசாரணை இன்னும் முடிவடையவில்லை எனத் தெரிய வருகிறது. 

திருச்சி சிறப்பு முகாமிலிருந்து நேற்று இரவு 11.15 மணிக்கு சென்னைக்கு காவல்துறை வாகனம் மூலம் அழைத்து வரப்பட்ட இவர்கள்,  இன்று(03)  முற்பகல் 10 மணியளவில் சென்னை விமான நிலையத்திலிருந்து  இலங்கை நோக்கி பயணித்தனர்.

மூவரும் காலை 11.30 மணிக்கு கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்தமை குறிப்பிடத்தக்கது.

விமானநிலையத்தில் தொடர் விசாரணைக்குள் முருகன், பயஸ், ஜெயக்குமார்.  இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜிவ் காந்தி கொலைக் குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு   33 ஆண்டுகள் வரை சிறையிலிருந்து கடந்த ஒன்றரை ஆண்டுகளுக்கு முன்னர் விடுவிக்கப்பட்டு, திருச்சி சிறப்பு முகாமில் தடுத்து வைக்கப்பட்டுள்ள முருகன், ரொபேர்ட் பயஸ் மற்றும் ஜெயக்குமார் ஆகியோர் இன்று காலை இலங்கையை  வந்தடைந்ததனர் இவர்கள் தற்போதுவரை விசாரணைக்குட்படுத்தப்பட்டுள்ளனர். இவர்களை அழைத்துச்செல்லச் சென்ற உறவுகள் இவர்களின் வருகைக்காக காத்துநிற்கின்றனர். இவர்கள் மூவருக்குமான விசாரணை இன்னும் முடிவடையவில்லை எனத் தெரிய வருகிறது. திருச்சி சிறப்பு முகாமிலிருந்து நேற்று இரவு 11.15 மணிக்கு சென்னைக்கு காவல்துறை வாகனம் மூலம் அழைத்து வரப்பட்ட இவர்கள்,  இன்று(03)  முற்பகல் 10 மணியளவில் சென்னை விமான நிலையத்திலிருந்து  இலங்கை நோக்கி பயணித்தனர்.மூவரும் காலை 11.30 மணிக்கு கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்தமை குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement

Advertisement