வரலாற்றுச் சிறப்புமிக்க நயினாதீவு ஸ்ரீ நாகபூஷணி அம்மன் கோவிலின் 2023ஆம் ஆண்டுக்கான உயர்திருவிழா சற்றுமுன் கொடியேற்றத்துடன் ஆரம்பமாகியது.
நாட்டின் பல பாகங்களிலுமிருந்தும் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
இதேவேளை இன்று காலை முதல் நயினாதீவிற்கு செல்வதற்கென ஆயிரக்கணக்காண மக்கள் குறிகட்டுவான் துறைமுகத்தில் கூடியிருந்தமை குறிப்பிடத்தக்கது.