மின்சாரக் கட்டணம் அதிகரிக்கப்பட்டாலும் உணவகங்களில் உணவு விலைகள் அதிகரிக்கப்பட மாட்டாது என அகில இலங்கை உணவக மற்றும் சிற்றுண்டிச்சாலை உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
அகில இலங்கை உணவகம் மற்றும் சிற்றுண்டி சாலை உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் ஹர்ஷன ருக்ஷான், தமது தொழிற்சங்க உறுப்பினர்களுடனான கலந்துரையாடலின் பின்னர் இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டதாகத் தெரிவித்தார்.
இன்று (20) முதல் மின்சார கட்டணத்தை 18% அதிகரிக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.