• May 17 2024

யாழிலிருந்து புதிய பஸ் சேவை...! நாளை முதல் ஆரம்பம்...!samugammedia

Sharmi / Oct 31st 2023, 3:26 pm
image

Advertisement

யாழில் இருந்து காரைநகரை நோக்கிய(785/1 வழித்தடம்) பேருந்து சேவை நாளையதினம் (01) ஆரம்பமாகின்றது.

இச்சேவை முதற் கட்டமாக காலை 10 மணிக்கு (785/1 வழித்தடம்) காரைநகரிலிருந்து பயணத்தை தொடங்கி யாழ்ப்பாணம் சென்று மீண்டும் மதியம் 1.20 ற்கு யாழ்ப்பாணத்திலிருந்து பயணத்தை ஆரம்பித்து காரைநகரை சென்றடைய தயாராகின்றது.

கடந்த காலங்களில் காரைநகர் - யாழ்ப்பாணம் பேரூந்து சேவையின் ஒரு பகுதியாக காரைநகர் - மூளாய் பிள்ளையார் கோவிலடி - டச்சு வீதி ஊடாக சித்தன்கேணி யாழ்ப்பாணம் வீதி - வட்டுக்கோட்டை சந்தி - அராலி செட்டியார்மடம் ஊடாக யாழ்ப்பாணம் செல்லும் பேருந்து முன்னர் ஏற்பட்ட கொரோனா பேரிடர், பொருளாதார நெருக்கடி மற்றும் ஏனைய சில காரணங்களால் தனது பயணத்தை தொடர்வதில் சிரமங்களை எதிர்கொண்டு தடைப்பட்டது.

இதனால் மக்கள் பல சிரமங்களை எதிர்கொண்டனர். மேலும் டச்சு வீதியின் சேதங்கள் காரணமாகவும் பஸ் போக்குவரத்து செய்ய முடியாத நிலை பயணிகளால் சுட்டிக்காட்டப்பட்டது. 

இதனையடுத்து கடந்த வாரம் டச்சு வீதி புனரமைக்கப்பட்டதோடு பஸ் போக்குவரத்தினை முன்னெடுப்பதற்கான முன்னேற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டன. 

இதன் தொடர்ச்சியாக  இலங்கை போக்குவரத்து சபையின் யாழ்ப்பாண பிராந்திய நிலையத்துடனும் கலந்துரையாடல்கள் முன்னெடுக்கப்பட்டதன் பயனாக மீண்டும் இந்த பேரூந்து சேவையை முன்னெடுக்க சாதகமான  கிடைத்துள்ளது.

எனவே மீண்டும் நாளை முதல் இச்சேவை ஆரம்பிக்கபட உள்ளதால் பேருந்தின் நேர அட்டவணையை பின்பற்றி பயணிகள் அனைவரும் பயன்பெற முடியும்.

குறிப்பாக பாடசாலை மாணவர்கள், வைத்தியசாலை செல்வோர், யாழ்ப்பாணம் செல்வோர் ஆகியோருக்கு இது மிகவும் பயனுடையதாக இருக்கும். 

மூளாய் டச்சு வீதி ஆரம்பம் முதல் சித்தன்கேணி டச்சு வீதி முடிவு வரையான வீதி பகுதியில் வாழும் மக்களின் போக்குவரத்து வசதியினை இலகுபடுத்துவதே இப் பேருந்து வழித்தடத்தின் பிரதான நோக்காகும். என யாழ்ப்பாணம் மற்றும் காரைநகர் இலங்கை போக்குவரத்து சாலை முகாமையாளர்கள் இன்று தெரிவித்துள்ளனர்.


யாழிலிருந்து புதிய பஸ் சேவை. நாளை முதல் ஆரம்பம்.samugammedia யாழில் இருந்து காரைநகரை நோக்கிய(785/1 வழித்தடம்) பேருந்து சேவை நாளையதினம் (01) ஆரம்பமாகின்றது.இச்சேவை முதற் கட்டமாக காலை 10 மணிக்கு (785/1 வழித்தடம்) காரைநகரிலிருந்து பயணத்தை தொடங்கி யாழ்ப்பாணம் சென்று மீண்டும் மதியம் 1.20 ற்கு யாழ்ப்பாணத்திலிருந்து பயணத்தை ஆரம்பித்து காரைநகரை சென்றடைய தயாராகின்றது.கடந்த காலங்களில் காரைநகர் - யாழ்ப்பாணம் பேரூந்து சேவையின் ஒரு பகுதியாக காரைநகர் - மூளாய் பிள்ளையார் கோவிலடி - டச்சு வீதி ஊடாக சித்தன்கேணி யாழ்ப்பாணம் வீதி - வட்டுக்கோட்டை சந்தி - அராலி செட்டியார்மடம் ஊடாக யாழ்ப்பாணம் செல்லும் பேருந்து முன்னர் ஏற்பட்ட கொரோனா பேரிடர், பொருளாதார நெருக்கடி மற்றும் ஏனைய சில காரணங்களால் தனது பயணத்தை தொடர்வதில் சிரமங்களை எதிர்கொண்டு தடைப்பட்டது.இதனால் மக்கள் பல சிரமங்களை எதிர்கொண்டனர். மேலும் டச்சு வீதியின் சேதங்கள் காரணமாகவும் பஸ் போக்குவரத்து செய்ய முடியாத நிலை பயணிகளால் சுட்டிக்காட்டப்பட்டது. இதனையடுத்து கடந்த வாரம் டச்சு வீதி புனரமைக்கப்பட்டதோடு பஸ் போக்குவரத்தினை முன்னெடுப்பதற்கான முன்னேற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டன. இதன் தொடர்ச்சியாக  இலங்கை போக்குவரத்து சபையின் யாழ்ப்பாண பிராந்திய நிலையத்துடனும் கலந்துரையாடல்கள் முன்னெடுக்கப்பட்டதன் பயனாக மீண்டும் இந்த பேரூந்து சேவையை முன்னெடுக்க சாதகமான  கிடைத்துள்ளது.எனவே மீண்டும் நாளை முதல் இச்சேவை ஆரம்பிக்கபட உள்ளதால் பேருந்தின் நேர அட்டவணையை பின்பற்றி பயணிகள் அனைவரும் பயன்பெற முடியும்.குறிப்பாக பாடசாலை மாணவர்கள், வைத்தியசாலை செல்வோர், யாழ்ப்பாணம் செல்வோர் ஆகியோருக்கு இது மிகவும் பயனுடையதாக இருக்கும். மூளாய் டச்சு வீதி ஆரம்பம் முதல் சித்தன்கேணி டச்சு வீதி முடிவு வரையான வீதி பகுதியில் வாழும் மக்களின் போக்குவரத்து வசதியினை இலகுபடுத்துவதே இப் பேருந்து வழித்தடத்தின் பிரதான நோக்காகும். என யாழ்ப்பாணம் மற்றும் காரைநகர் இலங்கை போக்குவரத்து சாலை முகாமையாளர்கள் இன்று தெரிவித்துள்ளனர்.

Advertisement

Advertisement

Advertisement