ஈழத்தின் புகழ் பூத்த இலங்கை வானொலி அறிவிப்பாளராகவும் பிபிசி தமிழோசை அறிவிப்பாளாராகவும் கடமையாற்றிய விமல் சொக்கநாதன் லண்டனில் ஏற்பட்ட விபத்தில் சிக்கி அகால மரணமடைந்தார்.
மாலை நேரத்தில் தனது வீட்டில் இருந்து நடை பயிற்சிக்காக சென்றபோது மின்வண்டி மோதியதால் இந்த விபத்து நடந்ததாக தெரியவந்துள்ளது.
இலங்கை வானொலியில் தனது ஊடகப் பணியை ஆரம்பித்த விமல் சொக்கநாதன் தனது 75 வயதில் மறைந்துள்ளார்.
இலங்கை வானொலிக்கு பின்னர் பிபிசி தமிழோசையில் பணிபுரிந்த விமல் சொக்கநாதன் அதன் பின்னர் ஐபிசி வானொலி ரி.ரி.என் தொலைக்காட்சி, ஜிரிவி தொலைக்காட்சி மற்றும் ஐபிசி தொலைக்காட்சி ஆகிய புலம்பெயர் ஊடகங்களில் செய்தி மற்றும் நடப்புவிவகார தளத்தில் தனித்து சேவையை வழங்கியவர்.
விமல் சொக்கநாதனின் மரணம் புலம்பெயர் ஊடகத்துறையை அதிர்ச்சிக்குள்ளாக்கிய நிலையில் அவரது மறைவை முன்னிறுத்திய இரங்கல் செய்திகளை அவரது ஊடகத்துறை நண்பர்கள் சமூக வலைத்தளங்களில் வெளிப்படுத்தி வருகின்றனர்.
விமல் சொக்கநாதன் அண்மையில் இலங்கைக்கு விஐயம் செய்து தனது நூல் வெளியீட்டுவிழாவில் பங்கேற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.
பிரபல அறிவிப்பாளர் விமல் சொக்கநாதன் விபத்தில் சிக்கி உயிரிழப்பு samugammedia ஈழத்தின் புகழ் பூத்த இலங்கை வானொலி அறிவிப்பாளராகவும் பிபிசி தமிழோசை அறிவிப்பாளாராகவும் கடமையாற்றிய விமல் சொக்கநாதன் லண்டனில் ஏற்பட்ட விபத்தில் சிக்கி அகால மரணமடைந்தார்.மாலை நேரத்தில் தனது வீட்டில் இருந்து நடை பயிற்சிக்காக சென்றபோது மின்வண்டி மோதியதால் இந்த விபத்து நடந்ததாக தெரியவந்துள்ளது.இலங்கை வானொலியில் தனது ஊடகப் பணியை ஆரம்பித்த விமல் சொக்கநாதன் தனது 75 வயதில் மறைந்துள்ளார்.இலங்கை வானொலிக்கு பின்னர் பிபிசி தமிழோசையில் பணிபுரிந்த விமல் சொக்கநாதன் அதன் பின்னர் ஐபிசி வானொலி ரி.ரி.என் தொலைக்காட்சி, ஜிரிவி தொலைக்காட்சி மற்றும் ஐபிசி தொலைக்காட்சி ஆகிய புலம்பெயர் ஊடகங்களில் செய்தி மற்றும் நடப்புவிவகார தளத்தில் தனித்து சேவையை வழங்கியவர்.விமல் சொக்கநாதனின் மரணம் புலம்பெயர் ஊடகத்துறையை அதிர்ச்சிக்குள்ளாக்கிய நிலையில் அவரது மறைவை முன்னிறுத்திய இரங்கல் செய்திகளை அவரது ஊடகத்துறை நண்பர்கள் சமூக வலைத்தளங்களில் வெளிப்படுத்தி வருகின்றனர்.விமல் சொக்கநாதன் அண்மையில் இலங்கைக்கு விஐயம் செய்து தனது நூல் வெளியீட்டுவிழாவில் பங்கேற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.