• May 20 2024

திருகோணமலையில் முதலைக் கடிக்கு உள்ளாகி ஒருவர் உயிரிழப்பு! samugammedia

Tamil nila / Nov 29th 2023, 7:52 pm
image

Advertisement

திருகோணமலை சம்பூர் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சம்பூர் -தொடுவான் குளத்தில் குளிப்பதற்காக இறங்கிய இளம் குடும்பஷ்தர் ஒருவரை முதலை தண்ணீருக்குள் இழுத்துச் சென்று , கொன்றுள்ளது. சடலமும் மீட்கப்பட்டுள்ளதாக சம்பூர் பொலிஸார் தெரிவித்தனர்.

இச்சம்பவம் இன்று புதன்கிழமை பகல் 1.00 மணியளவில் இடம்பெற்றுள்ளது.எனினும் சடலமானது பிரதேச மக்களின் தேடுதல் நடவடிக்கையின்போது பின்னர் மாலை 5.30 மணியளவில் குளத்திலிருந்து மீட்கப்பட்டுள்ளது. 



கணவனும்,மனைவியும் வயலை பார்த்துவிட்டு வரும் வழியில் கணவன் குளிப்பதற்காக குளத்தில் இறங்கியபோதே முதலை அவரை திடிரென பாய்ந்நு இழுத்துத் சென்றுள்ளது.

குளத்தின் கரையிலிருந்த மனைவி கணவனை காப்பாற்ற முயற்சித்தபோது அது பலனளிக்கவில்லை.இதன்பின்னர் பிரதேச மக்கள் ஒன்றிணைந்து பல மணிநேரம் குளத்தில் தேடுதல் மேற்கொண்டபோது சடலமானது மாலை 5.30 மணியளவிலே கண்டெடுக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு முதலைத் தாக்குதலுக்குள்ளாகி சடலமாக மீட்கப்பட்டவர் தோப்பூர் -பாட்டாளிபுரத்தைச் சேர்ந்த கதிர்காமத்தம்பி நிதுர்சன் வயது 20  தெரியவருகின்றது.இவருக்கு பிள்ளைகள் இல்லையென்பதும் குறிப்பிடத்தக்கது. 

சடலம் மூதூர் தள வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்படுகின்றது.



சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை சம்பூர் பொலிஸார் முன்னெடுத்துள்ளனர். 


திருகோணமலையில் முதலைக் கடிக்கு உள்ளாகி ஒருவர் உயிரிழப்பு samugammedia திருகோணமலை சம்பூர் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சம்பூர் -தொடுவான் குளத்தில் குளிப்பதற்காக இறங்கிய இளம் குடும்பஷ்தர் ஒருவரை முதலை தண்ணீருக்குள் இழுத்துச் சென்று , கொன்றுள்ளது. சடலமும் மீட்கப்பட்டுள்ளதாக சம்பூர் பொலிஸார் தெரிவித்தனர்.இச்சம்பவம் இன்று புதன்கிழமை பகல் 1.00 மணியளவில் இடம்பெற்றுள்ளது.எனினும் சடலமானது பிரதேச மக்களின் தேடுதல் நடவடிக்கையின்போது பின்னர் மாலை 5.30 மணியளவில் குளத்திலிருந்து மீட்கப்பட்டுள்ளது. கணவனும்,மனைவியும் வயலை பார்த்துவிட்டு வரும் வழியில் கணவன் குளிப்பதற்காக குளத்தில் இறங்கியபோதே முதலை அவரை திடிரென பாய்ந்நு இழுத்துத் சென்றுள்ளது.குளத்தின் கரையிலிருந்த மனைவி கணவனை காப்பாற்ற முயற்சித்தபோது அது பலனளிக்கவில்லை.இதன்பின்னர் பிரதேச மக்கள் ஒன்றிணைந்து பல மணிநேரம் குளத்தில் தேடுதல் மேற்கொண்டபோது சடலமானது மாலை 5.30 மணியளவிலே கண்டெடுக்கப்பட்டுள்ளது.இவ்வாறு முதலைத் தாக்குதலுக்குள்ளாகி சடலமாக மீட்கப்பட்டவர் தோப்பூர் -பாட்டாளிபுரத்தைச் சேர்ந்த கதிர்காமத்தம்பி நிதுர்சன் வயது 20  தெரியவருகின்றது.இவருக்கு பிள்ளைகள் இல்லையென்பதும் குறிப்பிடத்தக்கது. சடலம் மூதூர் தள வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்படுகின்றது.சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை சம்பூர் பொலிஸார் முன்னெடுத்துள்ளனர். 

Advertisement

Advertisement

Advertisement