புங்குடுதீவு மத்திய கல்லூரியின் புதிய நுழைவாயில் திறப்பு விழா எதிர்வரும் 24 ஆம் திகதி கல்லூரி வளாகத்தில் காலை 9 மணிக்கு இடம்பெறவுள்ளது.
புங்குடுதீவு மத்திய கல்லூரியின் அதிபர் கி. விநோதன் தலைமையில் இடம்பெறவுள்ள இந்த நிகழ்வில் பிரதம விருந்தினராக வடக்கு மாகாண பிரதமர் செயலாளர் இளங்கோவன் கலந்துகொள்ளவுள்ளதுடன், தொலை தொடர்பு திணைக்களத்தின் ஓய்வு பெற்ற சிரேஷ்ட நிர்வாக உத்தியோகத்தர் வேலாயுதம் சிவசாமி கலந்துகொண்டு நுழைவாயிலை திறந்துவைக்கவுள்ளார்.
புங்குடுதீவு பத்தாம் வட்டாரத்தினைச் சேர்ந்த அமரர் செல்வி. சின்னத்துரை வசந்தலெட்சுமியின் ஞாபகார்த்தமாக அவரது குடும்பத்தினரால் புங்குடுதீவு மத்திய கல்லூரியில் நுழைவாயில் அமைக்கப்பட்டுள்ளதுடன் கல்லூரியின் நடைபாதையும் புனரமைக்கப்பட்டுள்ளது.