மகசீன் சிறைச்சாலையில் சுமார் 25 வருடங்களாக அரசியல் கைதிகளாக வாழுகின்றவர்களின் துன்பங்களை அருகில் இருந்து பார்த்திருந்ததாகவும் எனவே அவர்களும் விரைவில் விடுதலை செய்யப்படவேண்டுமென பயங்கரவாத தடுப்பு சட்டத்தின் கீழ் கைதாகி பிணையில் விடுதலையான வைத்தியர் சிவரூபன் தெரிவித்துள்ளார்.
கிளிநொச்சி பளை வைத்தியசாலையின் பணிப்பாளராக கடமையாற்றிய வைத்தியர் பயங்கரவாத தடுப்பு சட்டத்தின் கீழ் கைதாகி நேற்றைய தினம் பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளார்
இந்த நிலையல் விடுதலை செய்யப்பட்ட வைத்தியர் இவ்வாறு கருத்து தெரிவித்தார்.
சிறைச்சாலையிலுள்ளவர்கள் மனஉறுதியுடன் இருக்கவேண்டும் என்று செல்சன் மண்டேலா குறிப்பிட்டதை போன்று மனஉறுதியுடன் சிறைச்சாதலைகளில் வாழ்ந்ததாக அவர் குறிப்பிட்டிருந்தார்.
தமிழ் இனத்தின் விடுதலைக்காக போராடியவர்களின் விடுதலைக்காக தமிழ் சமூகம் தொடர்ந்தும் குரல்கொடுக்க வேண்டும் என்றும் வைத்தியர் சிவரூபன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
அரசியல் கைதிகளின் விடுதலைக்கு எமது சமூகம் தொடர்ந்து குரல் கொடுக்கவேண்டும் - பிணையில் விடுதலையான வைத்தியர் சிவரூபன் மகசீன் சிறைச்சாலையில் சுமார் 25 வருடங்களாக அரசியல் கைதிகளாக வாழுகின்றவர்களின் துன்பங்களை அருகில் இருந்து பார்த்திருந்ததாகவும் எனவே அவர்களும் விரைவில் விடுதலை செய்யப்படவேண்டுமென பயங்கரவாத தடுப்பு சட்டத்தின் கீழ் கைதாகி பிணையில் விடுதலையான வைத்தியர் சிவரூபன் தெரிவித்துள்ளார். கிளிநொச்சி பளை வைத்தியசாலையின் பணிப்பாளராக கடமையாற்றிய வைத்தியர் பயங்கரவாத தடுப்பு சட்டத்தின் கீழ் கைதாகி நேற்றைய தினம் பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளார்இந்த நிலையல் விடுதலை செய்யப்பட்ட வைத்தியர் இவ்வாறு கருத்து தெரிவித்தார்.சிறைச்சாலையிலுள்ளவர்கள் மனஉறுதியுடன் இருக்கவேண்டும் என்று செல்சன் மண்டேலா குறிப்பிட்டதை போன்று மனஉறுதியுடன் சிறைச்சாதலைகளில் வாழ்ந்ததாக அவர் குறிப்பிட்டிருந்தார்.தமிழ் இனத்தின் விடுதலைக்காக போராடியவர்களின் விடுதலைக்காக தமிழ் சமூகம் தொடர்ந்தும் குரல்கொடுக்க வேண்டும் என்றும் வைத்தியர் சிவரூபன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.