யாழ் தெல்லிப்பழை யூனியன் கல்லூரியின் பெயருக்கு களங்கத்தை ஏற்படுத்தும் விதமாகவும் அபிவிருத்திகளுக்கு தடையேற்படுத்தும் விதமாகவும் செயற்படும் பாடசாலையில் கல்வி கற்பிக்கும் நவநீதன் ஆசிரியரை உடனடியாக இடம்மாற்றக் கோரி பெற்றோர்களால் இன்று(1) காலை 9.00 மணியளவில் பாடசாலை முன்றலில் இடம்பெற்றது.
அண்மையில் பாடசாலை மாணவர்கள் அதிபரினால் வகுப்பறையின் வெளியே நிறுத்தி வைக்கப்பட்டிருந்த போது அதனை காணொளியெடுத்து சமூக வலைத்தளங்களில் குறித்த ஆசிரியர் பகிர்ந்திருந்தார்.
இதேவேளை அதற்கு எதிர்ப்புத் தெரிவித்து கடந்த ஒரு சில வாரங்களுக்கு முன் மாணவர்களால் போராட்டமொன்று மேற்கொள்ளப்பட்டது.
இந் நிலையில் குறித்த போராட்டத்திற்கு எவ்வித முடிவுகளும் எட்டப்படாத நிலையில் பெற்றோரால் இன்றைய தினம் போராட்டம் மேற்கொள்ளப்பட்டமை குறிப்பிடத்தக்கது.